Showing posts with label மோர்கூழ். Show all posts
Showing posts with label மோர்கூழ். Show all posts
Wednesday, 1 February 2012
மோர்கூழ்!
தேவையானவை============
ரவை-- 1கப்.
புளித்தமோர். ரவையோடு நீர்த்த, புளித்த மோர் சேர்த்து மிகவும் நீர்க்க இருக்கும்படி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க========
நல்லெண்ணெய்-- சிறிய குழிகரண்டி.
கடுகு சிறிது,
கறிவேப்பிலை கொஞ்சம்,
பெருங்காயம் சிறிது,
கொத்துமல்லித்தழை கொஞ்சம் (பொடியாய் நறுக்கிகொள்ளவும்)
பச்சைமிளாய் 2 - நறுக்கி வைத்துக் கொள்ளவும்
மோர்மிளகாய் இருந்தால் வறுத்து கூழுடன் சேர்த்துக் கொள்ளலாம்
பெருங்காயம் சிறிது.
நெய்-- 4 ஸ்பூன்.
தேவையான உப்பு.
செய்முறை
========
அடுப்பில் வாணலியை ஏற்றி, (இதயம்) நல்லெண்ணயை விட்டுக் காய்ந்ததும், கடுகு வெடிக்க விடவும்.
பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் மோர் ரவையை, வாணலியில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.
இப்போது 2 ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும்.
ரவா மோர் கெட்டியாகி அல்வா பதத்துக்கு முன்னே இளகிய பதத்தில் இருக்கும் போது இன்னும் நெய் ஊற்றிக் கிளறி, இறக்கி வைக்கவும்.
தட்டில் நெய் தடவி சூடாக மோர்கூழை விட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)