ஆடைகள் மக்களின் கலாசாரத்தைச்
சொல்கின்றன.
இன்று
விதவிதமான ஆடைகள்!
பார்க்கும் உத்தியோகத்திற்கேற்ற உடைகள்!
வழக்கறிஞர்,நீதிபதி,டாக்டர்,இவர்களுக்கான ஆடைகள்....
பள்ளிச் சிறார்களுக்கான யூனிபார்ம்...
பலவகைப் பண்பாடுடைய மக்கள் அணியும் பாரம்பரிய ஆடைகள்
அந்த அந்த விசேஷங்களுக்கான ஆடைகள்,
திருமணச் சடங்கு போன்றவைகளில் அணியும் ஆடைகள்!
பெண்களுக்கென்று அழகான வண்ணமான ஆடைகள் கண்கவரும்.
கவுன்,பாவாடை,தாவணி,புடவை என்று உண்டு.
மேலைநாட்டு நாகரிகம் நம் ஆடைகளில் வந்துவிட்டது.
காலத்திற்கேற்றக் கோலமாக மட்டுமல்ல,இன்றைய அவசியமாகவும்
பெண்களின் ஆடைகள் ஜீன்ஸ்,ஷர்ட்
என்றாகிவிட்டது.அதையும் நமக்கு ஏற்றவிதமாக அணியலாம்.
இன்றைய ஊடகங்களில் ஆண்,பெண் சிறார் ஆடைகள் பற்றிய
விளம்பரங்கள் புதுமையாக ஆட்டமும் பாட்டுமாகக்
காணக் கிடைக்கின்றன!
நடை , உடை. பாவனை, என்பதில் உடையின் முக்கியத்தை அறியலாம்.
ஆள் பாதி,ஆடை பாதி என்பது சொலவடை.
மகாத்மா காந்தி அவர்கள்'அரை சந்நியாசி' என ப்பட்டார்.
ஏனெனில் அவர் வேட்டி,துண்டில் தான் இருப்பார்.
ஏழையர்க்காக வேட்டி அணிந்தவர்.
"உடுக்கை இழந்தவன் கைபோல" என்று வள்ளுவனார்
மானம் காக்கும் ஆடையைப் பற்றி நட்பின் அருமையைக் கூறும்
இடத்தில் குறிப்பிடுகிறார்.
பெண்கள் அணியும் சீலை சீலை,புடவை,கூ றை,சீரை எனப்படும்.
மடி என்றும் ஆடைக்கு பெயருண்டு.
எனக்கு ஆடையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது!பகிர்ந்து கொண்டேன்
Friday, 29 July 2011
Friday, 1 July 2011
துணியே அணி!--2
கைத்தறித் துணி என்று சொன்னதும்,
தாரு சுத்தறதும்,பாவு ஓடறதும்,தறி நெய்யறதும்,
கெண்டைவேட்டி,கெண்டைச் சேலை(சரிகை)என்றும்
புடவையா,வேட்டியா விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுவதும்
நினைவு வருகிறது!அரைகுறை நினைவிலேச் சொல்கிறேன்.
எங்க ஊரில்,கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் தறி நெய்வதில்
தேர்ச்சி பெற்று வாழ்ந்தனர்.
.
'சின்னச்சின்ன இழைப் பின்னிப்பின்னிவரும்
..சித்திரக் கைத்தறி சேலையடி நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி!'
கைத்தறி சேலையின் பெருமையை,
ஒரு கவிஞர் பாடிப் புகழ்ந்தார்!
பின்பு,சின்னாளப்பட்டில்,'பளப்பள' சேலைகள்
வண்ணங்களில் மிளிர்ந்தன.
சின்னாளப்பட்டி என்னும் ஊரில் சிறப்பாக நெய்யப்படும்
சேலைகள்.
பெண்களுக்குப் பாவாடைத்துணிகள்,
நல்ல பட்டுப்போன்றே கரைகள் வைத்து,
கட்டங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மில்துணிகள் வந்த காலத்தில்,
புடவைகள் கட்டு(பேல்)கட்டாக வந்து இறங்கும்.
எத்தனை கெஜம் புடவைக்குத் தேவையோ அத்தனை
கெஜம் அளந்து கட்செய்து வாங்கலாம்.(அப்போவெல்லாம்
6கெஜம் ஒரு புடவைக்கு)பின்புதான்,அப்படியே
புடவை,புடவையாக விற்பனைக்கு வந்தன.
எஸ்குமார்,விமல்,பாம்பே டையிங்,ரூபிக்வீன்,போன்ற
மில்கம்பனிகள் நிறைய வகைகளை அறிமுகப் படுத்தின.
தொடரும்...
தாரு சுத்தறதும்,பாவு ஓடறதும்,தறி நெய்யறதும்,
கெண்டைவேட்டி,கெண்டைச் சேலை(சரிகை)என்றும்
புடவையா,வேட்டியா விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுவதும்
நினைவு வருகிறது!அரைகுறை நினைவிலேச் சொல்கிறேன்.
எங்க ஊரில்,கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் தறி நெய்வதில்
தேர்ச்சி பெற்று வாழ்ந்தனர்.
.
'சின்னச்சின்ன இழைப் பின்னிப்பின்னிவரும்
..சித்திரக் கைத்தறி சேலையடி நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி!'
கைத்தறி சேலையின் பெருமையை,
ஒரு கவிஞர் பாடிப் புகழ்ந்தார்!
பின்பு,சின்னாளப்பட்டில்,'பளப்பள' சேலைகள்
வண்ணங்களில் மிளிர்ந்தன.
சின்னாளப்பட்டி என்னும் ஊரில் சிறப்பாக நெய்யப்படும்
சேலைகள்.
பெண்களுக்குப் பாவாடைத்துணிகள்,
நல்ல பட்டுப்போன்றே கரைகள் வைத்து,
கட்டங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
மில்துணிகள் வந்த காலத்தில்,
புடவைகள் கட்டு(பேல்)கட்டாக வந்து இறங்கும்.
எத்தனை கெஜம் புடவைக்குத் தேவையோ அத்தனை
கெஜம் அளந்து கட்செய்து வாங்கலாம்.(அப்போவெல்லாம்
6கெஜம் ஒரு புடவைக்கு)பின்புதான்,அப்படியே
புடவை,புடவையாக விற்பனைக்கு வந்தன.
எஸ்குமார்,விமல்,பாம்பே டையிங்,ரூபிக்வீன்,போன்ற
மில்கம்பனிகள் நிறைய வகைகளை அறிமுகப் படுத்தின.
தொடரும்...
Wednesday, 29 June 2011
ஆடையே அணி!
எண்ணங்களை எழுதாமல்,
வருஷம் உருண்டோடி விட்டது.....
எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் உள்ளத்தில்...
நினைவுகளாய் நிழலாடிய சிலதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன்னால்,
கைராட்டையில் நெய்தக் கதருக்குப் புனிதமான மவுசு
இருந்தது!
அப்புறம், கைத்தறி வேஷ்டி வகைகள்,புடவை வகைகள்...
பிறந்த நாளுக்குக் காசுமாலைச் சட்டை அணிந்த நினைவு இருக்கு!
முதல் பிறந்த நாளுக்கு வாங்கியதை
ஐந்து வயதுவரை பாவாடைக்கு மேல்சட்டையாய் அணிந்திருக்கேன்.
சம்கி வேலைப்பாடு செய்த அழகழகான வண்ணத்தில்,
ரொஜா,நீலம்,பச்சை,மேகவண்ணம்,மயில்கழுத்துவண்ணம்
போன்ற பல வண்ணங்களில்...
சீட்டியில் விதவிதமான கவுன்கள்,பாவாடைகள்,சட்டைகள்
அணியலாம்.(சிங்கப்பூர் சீட்டி சாயம் போகாது!
அழகானப் பூக்கள் நிறைந்திருக்கும்!)
காடா,கெட்டியா மொத்தமாக இருக்கும்.
ஏணை ரெட்டு என்று இருமுனைகளும் தைக்கப்பட்டு
குழந்தைக்குத் 'தூளி'யாக அரவணைக்கும்!
உள்ளாடகள் இருபாலாரும் அணிவதும் 'காடா'த் துணியில்.
மல்லுத்துணியும் உபயோகத்தில் வந்தது.
'பாப்ளின்' என்றொரு துணிவகை!பல கலர்களில் இருக்கும்!
உள்ளாடை,தலையணை உறைகள் இதற்குப் பயன்பட்டது!
'லாங்கிலாத்' என்றொருவகையுண்டு.
ரவிக்கை,என்பது பெண்களணியும் ஜாக்கெட் அதாவது
சோலியாக உருவெடுத்தது!
சின்னப்பூக்கள்,பொடிக் கட்டங்கள், கொஞ்சம் பெரிய கட்டங்க்ள்,
புள்ளிகள், இவையெல்லாம் நிறைந்த விதவித வண்ணத்தில்
பைப்பிங் செய்து தைத்த ரவிக்கைகள்!சில்க்கிலும்,
சீட்டியிலும்!
பின்பு 'லான்'என்னும் துணிவகை வந்தது!
பல வண்ணங்களாக, சோலிகளில் மிளிர்ந்தன!
'லினன்'என்று ஒருவகை! வண்ணவண்ணப் பூக்களுடன் பலகலர்களில்
வந்தது.பெண்குழந்தைகள் பாவாடை,மேல்சட்டையில்!
துவள,மிருதுவாக,இருக்கும்!
ஜார்ஜெட்,வெல்வெட்,நைலான்,நைலெx போன்ற வகைகளும்
புடவைகளாகவும்,
குழந்தைகள் ஆடைகளாகவும் உபயோகத்தில்
இருந்தன!
தொடரும்...
வருஷம் உருண்டோடி விட்டது.....
எழுத வேண்டும் என்ற எண்ணம் மட்டும் என் உள்ளத்தில்...
நினைவுகளாய் நிழலாடிய சிலதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன்னால்,
கைராட்டையில் நெய்தக் கதருக்குப் புனிதமான மவுசு
இருந்தது!
அப்புறம், கைத்தறி வேஷ்டி வகைகள்,புடவை வகைகள்...
பிறந்த நாளுக்குக் காசுமாலைச் சட்டை அணிந்த நினைவு இருக்கு!
முதல் பிறந்த நாளுக்கு வாங்கியதை
ஐந்து வயதுவரை பாவாடைக்கு மேல்சட்டையாய் அணிந்திருக்கேன்.
சம்கி வேலைப்பாடு செய்த அழகழகான வண்ணத்தில்,
ரொஜா,நீலம்,பச்சை,மேகவண்ணம்,மயில்கழுத்துவண்ணம்
போன்ற பல வண்ணங்களில்...
சீட்டியில் விதவிதமான கவுன்கள்,பாவாடைகள்,சட்டைகள்
அணியலாம்.(சிங்கப்பூர் சீட்டி சாயம் போகாது!
அழகானப் பூக்கள் நிறைந்திருக்கும்!)
காடா,கெட்டியா மொத்தமாக இருக்கும்.
ஏணை ரெட்டு என்று இருமுனைகளும் தைக்கப்பட்டு
குழந்தைக்குத் 'தூளி'யாக அரவணைக்கும்!
உள்ளாடகள் இருபாலாரும் அணிவதும் 'காடா'த் துணியில்.
மல்லுத்துணியும் உபயோகத்தில் வந்தது.
'பாப்ளின்' என்றொரு துணிவகை!பல கலர்களில் இருக்கும்!
உள்ளாடை,தலையணை உறைகள் இதற்குப் பயன்பட்டது!
'லாங்கிலாத்' என்றொருவகையுண்டு.
ரவிக்கை,என்பது பெண்களணியும் ஜாக்கெட் அதாவது
சோலியாக உருவெடுத்தது!
சின்னப்பூக்கள்,பொடிக் கட்டங்கள், கொஞ்சம் பெரிய கட்டங்க்ள்,
புள்ளிகள், இவையெல்லாம் நிறைந்த விதவித வண்ணத்தில்
பைப்பிங் செய்து தைத்த ரவிக்கைகள்!சில்க்கிலும்,
சீட்டியிலும்!
பின்பு 'லான்'என்னும் துணிவகை வந்தது!
பல வண்ணங்களாக, சோலிகளில் மிளிர்ந்தன!
'லினன்'என்று ஒருவகை! வண்ணவண்ணப் பூக்களுடன் பலகலர்களில்
வந்தது.பெண்குழந்தைகள் பாவாடை,மேல்சட்டையில்!
துவள,மிருதுவாக,இருக்கும்!
ஜார்ஜெட்,வெல்வெட்,நைலான்,நைலெx போன்ற வகைகளும்
புடவைகளாகவும்,
குழந்தைகள் ஆடைகளாகவும் உபயோகத்தில்
இருந்தன!
தொடரும்...
Monday, 7 June 2010
கண்ணா! என் கண்மணியே!
ராமு கதை சொல்கிறான்.
ரொம்ப ஆர்வமோடு குழந்தைகள் கதை கேட்கிறார்கள்..
பின்னாலே தளர்நடை பயின்று ஓர் பாலகன் கண்விரிய...வாய்மலர்ந்து...வருகிறான்!
கதையில் வரும் காக்காய் தாகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்று "கா கா"ன்னு கத்தறது!
அப்பிடீன்னு சொல்லிக் கொண்டே பின்னால் திரும்பி பார்க்கிறான் ராமு.
கதையை இன்னும் சுவையாகச் சொல்லச் சொல்ல அந்த பாலகன் ராமுவின் முதுகில் சாய்ந்து, கழுத்தை வளைத்து ராமுவையே பார்த்துக் கொண்டிருந்தான்!
கதையில்....
காக்கா மூக்காலே ஒவ்வொரு கல்லாகக் கொத்திக் கொண்டுபோய்.... ஜாடியில் போட்டது....
தண்ணீரும் மேலே வந்துவிட்டது. காகமும் தாகம் தீரக் குடித்தது!
காகம் பறந்து போனது!
கதையும் முடிந்து போனது!
எல்லாக் குழந்தைகளும் கைத் தட்டி மகிழ்ந்தன!
இப்பொழுது ராமு பாலகனைப் பார்க்கிறான்!
ராமுவின் முதுகைக் கட்டிக்கொண்டிருக்கும் அழகில் லயித்துப் போகிறான்!...
பெரியாழ்வார் திருமொழி நினைவுக்கு வருகிறது!
கிண்கிணிக் கட்டி கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் எனைப்புறம் புல்குவான்
ஆயர்களேறெனைப் புறம்புல்குவான்.
ரொம்ப ஆர்வமோடு குழந்தைகள் கதை கேட்கிறார்கள்..
பின்னாலே தளர்நடை பயின்று ஓர் பாலகன் கண்விரிய...வாய்மலர்ந்து...வருகிறான்!
கதையில் வரும் காக்காய் தாகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்று "கா கா"ன்னு கத்தறது!
அப்பிடீன்னு சொல்லிக் கொண்டே பின்னால் திரும்பி பார்க்கிறான் ராமு.
கதையை இன்னும் சுவையாகச் சொல்லச் சொல்ல அந்த பாலகன் ராமுவின் முதுகில் சாய்ந்து, கழுத்தை வளைத்து ராமுவையே பார்த்துக் கொண்டிருந்தான்!
கதையில்....
காக்கா மூக்காலே ஒவ்வொரு கல்லாகக் கொத்திக் கொண்டுபோய்.... ஜாடியில் போட்டது....
தண்ணீரும் மேலே வந்துவிட்டது. காகமும் தாகம் தீரக் குடித்தது!
காகம் பறந்து போனது!
கதையும் முடிந்து போனது!
எல்லாக் குழந்தைகளும் கைத் தட்டி மகிழ்ந்தன!
இப்பொழுது ராமு பாலகனைப் பார்க்கிறான்!
ராமுவின் முதுகைக் கட்டிக்கொண்டிருக்கும் அழகில் லயித்துப் போகிறான்!...
பெரியாழ்வார் திருமொழி நினைவுக்கு வருகிறது!
கிண்கிணிக் கட்டி கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் எனைப்புறம் புல்குவான்
ஆயர்களேறெனைப் புறம்புல்குவான்.
Saturday, 29 May 2010
உணர்வுகள்..!
உணர்வுகள்..!
ஞாபகசக்தி என்பது ஒரு வரமோ? சாபமோ?
இரண்டும் தான்!!
மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது..
ஏதோ ஒன்றை நினைக்கத் தொட்டுத் தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது....
உறவுகளில் தெரியும் முரணோ, பாசமோ..
நாம் பார்த்த சினிமாவைப் பற்றியோ, கண்ணில் பட்ட காட்சியைப் பற்றியோ
படித்த புத்தகத்தினால் பாதிக்கப் பட்டோ
சிந்திக்கையில் எழும் நினைவு...அதனால் தோணும் உணர்வுகள்...பலவிதம்..
வீரத்தில், பக்தியில், காதலில், கருணையில், அன்பினில்...உயர்ந்திடும் உணர்வுகள்!
வீரத்தில் சிலிர்த்தெழுந்திடும் உணர்வு!
பக்தியில் நெக்குருகி நெகிழ்ந்திடும் உணர்வு!
காதலில் தவித்திடும் உணர்வு!
கருணையில் கனிந்திடும் உணர்வு!
அன்பினில் அடங்கிடும் உணர்வு!
கோபத்தில், பொறாமையில், வெறுப்பில், சினத்தில்...தோன்றும் உணர்வுகள்!
கோபம் வந்தால் அதன் வழியேச் சென்று கோபம் கொள்ளலாம்..
பொறாமை வெறுப்பு வரும்தான்!
ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்து அவற்றை வராமலிருக்கும் வழியை முயல வேண்டும்.
மனிதருக்குள்ளே தோன்றும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பக்தி உணர்வை விளக்கும் தேவாரப் பாடல் ஒன்று நினைவில்:
விறகில் தீயில்நன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
(விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்)
ஞாபகசக்தி என்பது ஒரு வரமோ? சாபமோ?
இரண்டும் தான்!!
மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது..
ஏதோ ஒன்றை நினைக்கத் தொட்டுத் தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது....
உறவுகளில் தெரியும் முரணோ, பாசமோ..
நாம் பார்த்த சினிமாவைப் பற்றியோ, கண்ணில் பட்ட காட்சியைப் பற்றியோ
படித்த புத்தகத்தினால் பாதிக்கப் பட்டோ
சிந்திக்கையில் எழும் நினைவு...அதனால் தோணும் உணர்வுகள்...பலவிதம்..
வீரத்தில், பக்தியில், காதலில், கருணையில், அன்பினில்...உயர்ந்திடும் உணர்வுகள்!
வீரத்தில் சிலிர்த்தெழுந்திடும் உணர்வு!
பக்தியில் நெக்குருகி நெகிழ்ந்திடும் உணர்வு!
காதலில் தவித்திடும் உணர்வு!
கருணையில் கனிந்திடும் உணர்வு!
அன்பினில் அடங்கிடும் உணர்வு!
கோபத்தில், பொறாமையில், வெறுப்பில், சினத்தில்...தோன்றும் உணர்வுகள்!
கோபம் வந்தால் அதன் வழியேச் சென்று கோபம் கொள்ளலாம்..
பொறாமை வெறுப்பு வரும்தான்!
ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்து அவற்றை வராமலிருக்கும் வழியை முயல வேண்டும்.
மனிதருக்குள்ளே தோன்றும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பக்தி உணர்வை விளக்கும் தேவாரப் பாடல் ஒன்று நினைவில்:
விறகில் தீயில்நன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
(விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்)
Friday, 12 March 2010
சந்தை!

ஒரு காலத்தில், மக்கள் தங்களிடமுள்ள பண்டங்களை ஓரிடத்தில் கூடி, விற்பனை செய்வார்கள்.
அது பணம் பெற்றுக்கொண்டோ, அல்லது பண்ட மாற்றாகவோ நடைபெறும்.
தனது ஆசை எண்ணமாக, பாரதியாரும் தம் பாடலில் கூறுவார்!
"கங்கை நதிப் புரத்துக் கோதுமைபண்டம்
...காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்"
சிங்க மராட்டியர்தம் கவிதைக் கொண்டு
...சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!"
பண்டைக் காலத்தில்,திருவிழாக்காலங்களில், மக்கள் கூடி,தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். இப்போதும் திருவிழாவின் போது "சந்தை" கூடும்!
ஆனால் "வார சந்தை" என்பது கிராமத்து மக்களுக்கு மிகவும் முக்கியம். அன்றாட தேவைகளுக்கு ஏற்ற பொருள்களை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்குச் செல்வார்கள்.
எங்கள் ஊரில் (தாரமங்கலம்) வியாழன் தோறும் சந்தை கூடும்!
சந்தை என்றால் ஒரு எதிர்பார்ப்பு எங்களுக்கு!
எங்கள் தந்தை காய்கறிகளுடன், பொரிகடலை, பழங்கள் வாங்கி வருவார்!
எங்களுக்கெல்லாம், (நாங்கள், எங்கள் சித்தப்பா பசங்களோட ஏழு, எட்டு பேரு இருப்போம்!) பகிர்ந்து உண்ணுவதில் மகிழ்ச்சி!
அந்தந்த காலத்தில் என்னப் பழம் கிடைக்குமோ, வாங்குவார். மாம்பழம், கொய்யாபழம், வெள்ளரிப்பழம்(வெல்லம் தொட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்!) கோசப் பழம்(தர்பூஸணிப் பழம்!) பேரிக்காய், சீதாப் பழம் போன்ற பலவகைப் பழங்கள்...
கரும்பு, அப்பா வெட்டித் தருவார். நாங்கள் வாசலில் கதைப் பேசிகொண்டே கரும்பைக் கடிச்சி, உறிஞ்சிக் கொண்டே...ப் பேசுவோம்!

காய்களெல்லாம் கூறு,கூறாகத்தான் விற்பார்கள்!
அக்கம்பக்கத்து கிராமத்தில் விளையும் காய்களும் புதுசாகிடைக்கும்!
கொளத்தூரு கத்திரி பிஞ்சு ஒரு புட்டிக்கூடை ஒரு ரூவாய்க்கு வித்திருக்கு!
எங்கள் வீட்டு புழக்கடையில், பந்தலில், அவரை, பீர்க்கங்காய்,புடலை எல்லாம் காய்க்கும்!
வெங்குவின் படைப்பு! உழைப்பு! வெங்கு என் அண்ணன்(சித்தப்பா மகன்), நன்றாக தோட்ட வேலை செய்வார்!
("வெங்குவின்கடை" யில் வரும் அதே வெங்கு!)
அவரைக் "கீரை மாஸ்டர்" என்று கூறுவோம்! கீரை பாத்தி கட்டி பாதுகாத்து வளர்ப்பார்!
சந்தையை விட்டு விட்டேனே! சந்தையில் தானியங்கள், புளி, மிளகாய், கொத்தமல்லிவிரை(தனியா) விவசாயிகளுக்குத் தேவையான பொருள்களும் கிடைக்கும்!
மக்களுக்குச் சேந்து கிணத்துக்கு வேண்டுமென்ற கயிறு, வாளி (பக்கெட்டு) எல்லாம் கிடைக்கும்!
கயிறு "பத்து மாரு, பதினஞ்சு மாரு" என்ற அளவில் வாங்குவார்கள் !
காய்கள் என்று சொல்லும்போது உருளைக் கிழங்கு (என்பது அபூர்வம்!) சந்தையில் அப்பா வாங்குவார்!
மறுநாள், வெள்ளிக்கிழமை "உருளைக் கிழங்கு பொடிமாஸ்" உண்டு! சாம்பார் (சின்ன வெங்காயம் போட்டு) உண்டு!
பெரிய வெங்காயம் அப்போதுதான் கிராமத்துக்கு வந்தது! அதிசயமா இவ்வளவு பெரிய வெங்காயம் என்று அதிசயித்திருக்கிறேன்!
வியாழன், கல்கி வரும் நாள்! ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!
இன்னொரு மறக்க முடியாத நினைவு!
சந்தைக்கு சந்தை தவறாமல், கண் தெரியாதப் பிச்சைக்காரர் ஒருவர் தெருவில் பாட்டுப் பாடிப் பிச்சைக் கேட்பார்!
காச்சனீ முத்துக் கருப்பங்களா!
கரும வாதனையில் உழன்றேன்!
(காசினியில் முத்துக்கருப்பஙளே! நான் கரும வாதனையில் உழல்கிறேன்!)
அடுத்து தன் வயிற்றில் அடித்துக் கொண்டு,
"ஒத்துருனாச்சும், ஆணைப் பெண்ணைப் பெத்த புண்ணியரே! ஒரு காச்சுனாச்சும் போடுங்கய்யா! அம்மா!"
வாசலில் தெருவில் காணும் காட்சி!
சந்தையிலிருந்து வரும் மக்கள் அவருக்குத் தின்பண்டமாக அவித்தக் கிழங்கு போன்றவை தருவார்கள்! காசுகளும் போடுவார்கள்! எங்கள் வீட்டிலும் அவருக்குக் காசுகள் தருவோம்!
சந்தைன்னு நினைத்தாலே, அந்த பிச்சைக்காரர் நினைவு வரும்!
பிறகு என்ன ஆனர் தெரியவில்லை!
Monday, 8 March 2010
பெண் !

"அம்மா! ராத்திரி நான் தூங்கும்போதும் வீட்டுவேலைன்னு எங்கிட்ட படுத்துக்க மாட்டே!
காலையிலும் வேலைன்னு நான் முழிச்சுக்கும்போது, பக்கத்துலே இருக்க மாட்டே!"
இது ஒரு பெண் குழந்தையின் புலம்பல்!
"ஷூவை இப்படி போட்டுண்டு, நாடாவை இப்படி கட்டு!" என்று ஜாடையில் சொல்லித் தரும் அம்மா!
நான்கு வயதுக் குழந்தைக்கு அம்மா கிடைக்க மாட்டாள்!
அப்போதெல்லாம் பெரியவர்களுக்காக (அம்மா) மடியாய், ஆசாரத்துடன் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்!
வேலைக்குப் போகும் அம்மாதான் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று இல்லை!
வீட்டில் இருக்கும் அம்மாவும் குழந்தைகளுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று அப்போது இருந்த காலம் உண்டு!

பெண் என்பவள் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் வாழ்ந்து சகாப்தம் படைத்திடுவாள்!
பெண்மை, அன்பில் ஒளிர்கின்றது!
பெண்மை பொறுமையில் மிளிர்கின்றது!
இன்றைய பெண்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கொள்ள வேண்டும்!
அதனால் உயர்வே அன்றி தாழ்வு வாராது!

இன்றைய ஆண்கள் பெண்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர்!
இரு கண்களாக ஆணும், பெண்ணும் அனுசரணையாய் வாழ்வதுதான் நிறைந்த வாழ்வாகும்!
பெண்ணின் பெருமையே பெருமை!
தனித்துவம் வாய்ந்து உயர்வினில் வளர்வது!!
பெண், குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்துவாள்!
குடும்பத்தில் அவளுக்கென இருக்கும் இடத்தை, யாராலும் நிரப்பிவிட முடியாது!
அவளுக்கு நிகர் அவளே!
இன்றைய நாகரீக உலகினில், பெண், ஆணுக்கு நிகராய் வானில் பறந்து, மண்ணில் அலைந்து வீடு காத்து, நாடும் காக்கின்றாள்!
"பெண்மை வெல்க!" என வாழ்த்துவோம்!
Tuesday, 2 March 2010
கண்ணன் குழல் அமுதம்-- 2.
கண்ணன் வேய்ங்குழல் ஊதற்சிறப்பு!
=================================
கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!
உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!
பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!
மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!
என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?
குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?
வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!
நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!
பாடல்கள் இதோ:
சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!
திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !
=================================
கண்ணனின் குழலிசை அமுதப் பிரவாகமாய் வழிகிறது!
உயிரினங்கள் எல்லாம் அந்த இசையில் கட்டுண்டு எப்படியெல்லாம் காட்சி அளிக்கின்றன!
பறவைகள் தன் கூடுதுறந்து தரையின்மீது கிடக்கின்றன ! கறவைகள் கால்பரப்பி, தலை தாழ்ந்து செவியாட்டாமல் அப்படியே நிற்கின்றன!
மருண்டமான்கள் மேய்தலை மறந்து,வாயிலுள்ள புல் கடைவாய் வழியாய் வெளியே நழுவும்படியாகத் தன்னை மறந்து, இருக்கும் நிலை, வரைந்த ஓவியங்களாய் அசையாதச் சித்திரங்களாய்க் காண்கின்றன!
என்னென்பது குழல்வழி அமுதகீதம்! யாதவக்கண்ணனின் கருணைநிறைந்த லீலையன்றோ?
குழலிசையில் உயிரினங்கள் எல்லாம் தன்நிலை மறந்து இருக்கும்போது மனிதராகிய நாம் எம்மாத்திரம்?
வண்டினம் சூழ்ந்த தாமரை போல சுருண்டுருண்ட குழல் சூழ்ந்த முகமலரோன், முகில்வண்ணன் சிறு வியர்வைத் துளிர்க்கும்படியான புருவங்கள் கூட, சிவந்த கண்கள் செருக
குழலின் துளைகளைச் சிறுவிரல்களால் தடவி குழலூதும் போது, குவியும் செவ்விதழின் அழகு போன்ற அற்புதக் காட்சிகளும், உயிரினங்களின் தன்னை மறந்த நிலைகளும் எழுதியச் சித்திரமாய்ப் படைத்து நமக்கு அளித்த பெரியாழ்வார் அனுபவித்ததை நமக்குப் பாடல்களாக
அளித்து அருளிச்செய்துள்ளார்!
நாம் இப்பாடல்களைப் படித்து உணர்ந்து, அனுபவித்து உய்வோமாக!
பாடல்கள் இதோ:
சிறுவிரல் கள் தடவிப் பறிமாறச்
..செங்கண் கோடச் செய்ய வாய்க்கொப் பளிக்க
குறுவெயர்ப் புருவம் கூட லிப்பக்
..கோவிந்தன் குழல் கொடூதி யபோது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
..வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்ப ரப்பிட்டுக்
..கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில் லாவே!
திரண்டெ ழுதழை மழைமுகில் வண்னன்
..செங்க மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டி ருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்
..ஊது கின்ற குழலோசை வழியே
மருண்டு மான்கணங்கள் மேய்கை மறந்து
..மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
..எழுதுசித் திரங்கள் போல நின்றனவே !
Friday, 26 February 2010
கண்ணன் குழல் அமுதம்!
இப்பாடலை ஒருதரம் படித்தேன்.
அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!
நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.
கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"
அவர் பார்வை தோளழகில் விழுகிறது!
கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!
யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.
யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !
பாவம் ! தேவகி!
கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!
தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?
பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."
இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"
ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!
இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!
"நம் பரமன்" அப்பாடா!
இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!
ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?
வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:
கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!
அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!
கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!
பெரியாழ்வார் திருமொழி.
====================
கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.
செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.
அந்த கோகுலத்திற்கேச் சென்று விட்டேன்!
நான் அனுபவித்த இன்பத்தை நீங்களும் அனுபவியுங்களேன்.
பெரியாழ்வார் மிக அற்புதமாக, கண்ணன் குழல் ஊதும் அழகை, கீத இசையை
மனம் கிறங்கிட அனுபவித்துக் கூறுகிறார்.
கண்ணனின் கண்களைப் பார்க்கிறார்! வியந்து பேசுகிறார்! "செம்பெருந்தடங்கண்ணன்!"
அவர் பார்வை தோளழகில் விழுகிறது!
கம்பன் சொன்னானே! "தோள் கண்டார் தோளேகண்டார்!" என்பது போல பெரியாழ்வர் "திரள் தோளன்" என்று கண்ணனின் புஜ பல பராக்கிரமத்தைப் பேசுகிறார்!
யசோதையின் மழலையாய், வளர்ந்து, பல அற்புதங்களை கோகுலத்தில் நிகழ்த்தி யாவர்
மனத்தையும் கொள்ளைக் கொண்ட யாதவச் சிறுவன்.
யசோதையும், பரந்தாமனைக் கொஞ்சி, குலவி, மிரட்டி, கயிற்றில் கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத்து, இன்னும் இன்னும் நிறைய அவனைக் கொண்டாடியிருக்கிறாள் !
பாவம் ! தேவகி!
கண்ணனின் விளையாடல்களைப் பக்கத்தில் இருந்து அனுபவித்தவளில்லை!
தேவகியின் மணிவயிற்றில் உதித்த பிள்ளையல்லவா?
பெரியாழ்வார் சொல்கிறார் "தேவகி சிறுவன் ...."
இன்னும் சொல்கிறார் 'தேவர்கள் சிங்கம்"
ஆம். நரசிம்மமாய் அவதரித்து, இரண்யனைக் கொன்று, பிரஹ்லாதனுக்கு அருளிய
"நரசிங்கமல்லவா அவன்!
இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போவதில் மனம் திருப்தி அடையவில்லையாம்!
"நம் பரமன்" அப்பாடா!
இப்பொழுது பெரியாழ்வாருக்கு உவகைப் பெருகுகிறது!
ஆமாம்...கண்ணனின் குழலூதும் அழகைப் பருக வந்துவிட்டு, அவனழகில் உருகி நின்றால் எப்படி?
வாருங்கள்! பெரியாழ்வார் கூறுகிறார்! கேட்போம்:
கண்ணனின் குழலிசைக் கேட்டவரெல்லாம் தவித்தனர்!
அமுத மய கீதமென்னும் கீத வலையில் சிக்குண்டு, வானவெளியில் இயங்கும்
கந்தர்வர்கள், மயங்கி நிலைகுலைந்தனராம்!
கந்தருவர் என்ன? நாமும் அந்த குழலிசை மயக்கத்தில் இருக்கிறோம்!
பெரியாழ்வார் திருமொழி.
====================
கண்ணன் வேய்ங்குழலூதற் சிறப்பு.
செம்பெருந் தடங்கண் ணன் திரள் தோளன்
..தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பர மன் இந் நாள்குழ லூதக்
...கேட்ட வர்கள் இடருற் ரன கேளீர்
அம்பரந் திரியும் காந்தப் பரெல்லாம்
...அமுத கீத வலையால் சுருக்குண்டு
நம்பர மன்றென்று நாணி மயங்கி
...நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே.
Tuesday, 2 February 2010
"டஸன் டெக்கான்!"
உஷாவுக்கு அப்போது ஆறுவயதுன்னு நினைக்கிறேன்!
சின்னவன் திலீபுக்கு மூன்றுவயது!
ஒருதடவை என் நாத்தனார் பிள்ளை எங்கவீட்டுக்கு
வந்திருந்தான்.கையில் இருந்த சாக்லெட் டப்பாவை
திலீபுவிடம் கொடுத்தான்.
குழந்தை என்னிடம் கொடுத்தான்!நான் அதை அறையில்,
பலகை மேலே வைத்து விட்டேன்!
ஊர்விஷயங்களெல்லாம் பேசினோம்,அந்தப்
பிள்ளை குளித்து விட்டு, உணவருந்தி விட்டு,
கூடத்தில் பாயில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு
அப்படியே உறங்கிப் போனான்!
அன்று இரவே ஊருக்குக் கிளம்பி விட்டான்!
அந்த சாக்லெட் டப்பா நினைவு வந்தது!
பாவம்! குழந்தைகள்! ஆசையாகச் சாக்லெட் தின்ன
காத்திண்டிருக்குமே!...ன்னு தோன்றியது!
உள்ளே போனால்...!!
அங்கே திலீப்'ஓ'வென்று அழறான்!
அதற்குள் உஷாவே வேகமாக என்னிடம் வந்து,
"அம்மா! சாக்லெட் திங்கணும் .னு ரொம்ப
ஆசையா இருந்துதும்மா!
நீயும் தரமாட்டேங்கறே!
அதான் நான் ஒரு சாக்லெட் திங்கப்
போகும்போது
இவன் வந்துட்டான்!இவனுக்கும் தந்தேன்மா!"
இப்பொ திலீப்,
"அம்மா!இவோ சாக்லெட்டை கல்லாலே ஒடச்சு ஒடச்சு
எனக்குக் கொஞ்சூன்டு! அவளுக்கு நெறயா எடுத்துக்கறா அம்மா!
ஓவென்று ஒரே அழுகை!
(பெரியவன் குமார் சாது!சமத்து!இந்த வம்புக்கே வரவில்லை!)
'அழாதெடாக் கண்ணு!!உஷா!டப்பாவைக் கொண்டா!
உஷா சாக்லெட் டப்பாவை என்னிடம் கொடுக்கின்றாள்1
திறந்து பார்த்தேன்!
கணிசமாக் கொறஞ்சு இருந்தது!
எவ்வளவு சாக்லெட் தின்றீர்கள் ரெண்டு பேரும்?
உஷா சொல்றா:அங்கே பக்கத்துல இருக்கிற ஸ்டூல இழுத்துண்டு வந்து,மேலே
அங்கே சுவரோரமா மரப் பெட்டி ஒன்று இருக்கும்!
"அம்மா! டெக்கான்(சாக்லெட் பேரு!)சாக்லெட்டுலே
சுத்தியிருந்த பேபர்லாம் இங்கதான் போட்டேன்மா!"இது உஷா.
மரப்பொட்டி சந்துல பன்னிரெண்டு சாக்லெட் பேபர் கிடந்தன!
பசங்களுக்குத் தெரிஞ்சி
அதுக்கப்புறம் உஷாவை "டஸன் டெக்கான்!"என்று கிண்டலடிக்க,
அவள் அழ ஒரே அமர்க்களம்தான்!
ஆனால்,பாவம் உஷா! டெக்கான்சாக்லெட்டை எடுக்க,
ஒவ்வொரு தடவையும் ஸ்டூல் மேல ஏறி,
டப்பாலேர்ந்து ஒருசாக்லெட் எடுத்து
கீழே இறங்கி(கூடவே திலீப் தயாரா இருப்பான்!)
முழுசு முழுசா ஆளுக்கொரு சாக்லெட்டுன்னு
திங்கத் தெரியலையே!
இதுல சத்தமில்லாம சாக்லெட்ட
கல்லுல ஒடைக்கிற கஷ்டம் வேற!
ஒடச்சு ஒடச்சே கஷ்டப் பட்டே 12 டெக்கான் சாக்லெட்டும்
தின்ற ரெண்டு குழந்தைகளின் பேதமையும்
மனசுக்கு வருத்தமா இருந்தது!
பகிர்ந்து தின்னும் குணம் பாராட்ட வேண்டும்!
உஷாவைப் ஒரு விஷயத்துக்குப் பாராட்டனும்!
அவளுக்கு எது திங்கக் கிடைத்தாலும்
எங்க எல்லாருக்கும் கொடுத்துத் தானும் தின்பாள்!
நல்லகுணம்!
சின்னவன் திலீபுக்கு மூன்றுவயது!
ஒருதடவை என் நாத்தனார் பிள்ளை எங்கவீட்டுக்கு
வந்திருந்தான்.கையில் இருந்த சாக்லெட் டப்பாவை
திலீபுவிடம் கொடுத்தான்.
குழந்தை என்னிடம் கொடுத்தான்!நான் அதை அறையில்,
பலகை மேலே வைத்து விட்டேன்!
ஊர்விஷயங்களெல்லாம் பேசினோம்,அந்தப்
பிள்ளை குளித்து விட்டு, உணவருந்தி விட்டு,
கூடத்தில் பாயில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டு
அப்படியே உறங்கிப் போனான்!
அன்று இரவே ஊருக்குக் கிளம்பி விட்டான்!
அந்த சாக்லெட் டப்பா நினைவு வந்தது!
பாவம்! குழந்தைகள்! ஆசையாகச் சாக்லெட் தின்ன
காத்திண்டிருக்குமே!...ன்னு தோன்றியது!
உள்ளே போனால்...!!
அங்கே திலீப்'ஓ'வென்று அழறான்!
அதற்குள் உஷாவே வேகமாக என்னிடம் வந்து,
"அம்மா! சாக்லெட் திங்கணும் .னு ரொம்ப
ஆசையா இருந்துதும்மா!
நீயும் தரமாட்டேங்கறே!
அதான் நான் ஒரு சாக்லெட் திங்கப்
போகும்போது
இவன் வந்துட்டான்!இவனுக்கும் தந்தேன்மா!"
இப்பொ திலீப்,
"அம்மா!இவோ சாக்லெட்டை கல்லாலே ஒடச்சு ஒடச்சு
எனக்குக் கொஞ்சூன்டு! அவளுக்கு நெறயா எடுத்துக்கறா அம்மா!
ஓவென்று ஒரே அழுகை!
(பெரியவன் குமார் சாது!சமத்து!இந்த வம்புக்கே வரவில்லை!)
'அழாதெடாக் கண்ணு!!உஷா!டப்பாவைக் கொண்டா!
உஷா சாக்லெட் டப்பாவை என்னிடம் கொடுக்கின்றாள்1
திறந்து பார்த்தேன்!
கணிசமாக் கொறஞ்சு இருந்தது!
எவ்வளவு சாக்லெட் தின்றீர்கள் ரெண்டு பேரும்?
உஷா சொல்றா:அங்கே பக்கத்துல இருக்கிற ஸ்டூல இழுத்துண்டு வந்து,மேலே
அங்கே சுவரோரமா மரப் பெட்டி ஒன்று இருக்கும்!
"அம்மா! டெக்கான்(சாக்லெட் பேரு!)சாக்லெட்டுலே
சுத்தியிருந்த பேபர்லாம் இங்கதான் போட்டேன்மா!"இது உஷா.
மரப்பொட்டி சந்துல பன்னிரெண்டு சாக்லெட் பேபர் கிடந்தன!
பசங்களுக்குத் தெரிஞ்சி
அதுக்கப்புறம் உஷாவை "டஸன் டெக்கான்!"என்று கிண்டலடிக்க,
அவள் அழ ஒரே அமர்க்களம்தான்!
ஆனால்,பாவம் உஷா! டெக்கான்சாக்லெட்டை எடுக்க,
ஒவ்வொரு தடவையும் ஸ்டூல் மேல ஏறி,
டப்பாலேர்ந்து ஒருசாக்லெட் எடுத்து
கீழே இறங்கி(கூடவே திலீப் தயாரா இருப்பான்!)
முழுசு முழுசா ஆளுக்கொரு சாக்லெட்டுன்னு
திங்கத் தெரியலையே!
இதுல சத்தமில்லாம சாக்லெட்ட
கல்லுல ஒடைக்கிற கஷ்டம் வேற!
ஒடச்சு ஒடச்சே கஷ்டப் பட்டே 12 டெக்கான் சாக்லெட்டும்
தின்ற ரெண்டு குழந்தைகளின் பேதமையும்
மனசுக்கு வருத்தமா இருந்தது!
பகிர்ந்து தின்னும் குணம் பாராட்ட வேண்டும்!
உஷாவைப் ஒரு விஷயத்துக்குப் பாராட்டனும்!
அவளுக்கு எது திங்கக் கிடைத்தாலும்
எங்க எல்லாருக்கும் கொடுத்துத் தானும் தின்பாள்!
நல்லகுணம்!
Subscribe to:
Posts (Atom)