Monday 21 November, 2011

திரைப்படம் --2

திரைப்படம் காலம் காட்டும் கண்ணாடியாகத் தெரிகிறது.
மக்களின் ஆடையணி,உபயோகிக்கும் பொருள்கள்,இவையாவும்,
காலத்திற்கேற்ப மாற்றம் அடைந்ததை,திரைப்படத்தில்
அறியலாம்.அறிவியல் வளர்ச்சியால் திரைப்படத்தில் ஏற்பட்ட
முன்னேற்றம் மிகப்பெரிது.

திரையிசைப் பாடல்கள், இலக்கியத்தரம் வாய்ந்தவைகளாகவும்
உள்ளன.எளிய நடையில் மண்மணத்தோடு அமைந்த பாடல்கள் ஏராளம்.

ஒருநிகழ்ச்சி,
ஆலயமணி படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
'என்னையாரென்று எண்ணி எண்ணி
..நீபார்க்கிறாய்?இது யார்பாடும்பாடலென்று
..நீ கேட்கிறாய்' என்றபாடல் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
பக்கத்தில் அமர்ந்திருப்பவர் யாரென்று பார்க்கவில்லை.
தலையை ஆட்டிக்கொண்டும்,தாளம் போட்டுக் கொண்டும்
கூடவே பாடிக் கொண்டிருக்கிறார்.சிலசமயம்,
என்மீதும் கைபடுகிறது. சங்கடத்துடன்
திரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இடைவேளை விட்டதும்...
பக்கத்து இருக்கையைப் பார்த்தேன்...மனம் பதட்டப் பட்டது!
விழியிழந்த சிறுவன்,
பத்து,பன்னிரெண்டு வயதிருக்கும்... ஆர்வமோடு தன் தாயாரோடு ,
பாடல்களைத் திரையரங்கில் கேட்டு இரசிக்கவே வந்திருக்கிறான்.
என்மனதைப் பாதித்த நிகழ்ச்சி இது.