Friday 29 July, 2011

ஆடையே அணி!-- 3

ஆடைகள் மக்களின் கலாசாரத்தைச்
சொல்கின்றன.

இன்று
விதவிதமான ஆடைகள்!
பார்க்கும் உத்தியோகத்திற்கேற்ற உடைகள்!
வழக்கறிஞர்,நீதிபதி,டாக்டர்,இவர்களுக்கான ஆடைகள்....
பள்ளிச் சிறார்களுக்கான யூனிபார்ம்...

பலவகைப் பண்பாடுடைய மக்கள் அணியும் பாரம்பரிய ஆடைகள்
அந்த அந்த விசேஷங்களுக்கான ஆடைகள்,
திருமணச் சடங்கு போன்றவைகளில் அணியும் ஆடைகள்!
பெண்களுக்கென்று அழகான வண்ணமான ஆடைகள் கண்கவரும்.
கவுன்,பாவாடை,தாவணி,புடவை என்று உண்டு.

மேலைநாட்டு நாகரிகம் நம் ஆடைகளில் வந்துவிட்டது.
காலத்திற்கேற்றக் கோலமாக மட்டுமல்ல,இன்றைய அவசியமாகவும்
பெண்களின் ஆடைகள் ஜீன்ஸ்,ஷர்ட்
என்றாகிவிட்டது.அதையும் நமக்கு ஏற்றவிதமாக அணியலாம்.
இன்றைய ஊடகங்களில் ஆண்,பெண் சிறார் ஆடைகள் பற்றிய
விளம்பரங்கள் புதுமையாக ஆட்டமும் பாட்டுமாகக்
காணக் கிடைக்கின்றன!

நடை , உடை. பாவனை, என்பதில் உடையின் முக்கியத்தை அறியலாம்.
ஆள் பாதி,ஆடை பாதி என்பது சொலவடை.
மகாத்மா காந்தி அவர்கள்'அரை சந்நியாசி' என ப்பட்டார்.
ஏனெனில் அவர் வேட்டி,துண்டில் தான் இருப்பார்.
ஏழையர்க்காக வேட்டி அணிந்தவர்.
"உடுக்கை இழந்தவன் கைபோல" என்று வள்ளுவனார்
மானம் காக்கும் ஆடையைப் பற்றி நட்பின் அருமையைக் கூறும்
இடத்தில் குறிப்பிடுகிறார்.

பெண்கள் அணியும் சீலை சீலை,புடவை,கூ றை,சீரை எனப்படும்.
மடி என்றும் ஆடைக்கு பெயருண்டு.
எனக்கு ஆடையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது!பகிர்ந்து கொண்டேன்

Friday 1 July, 2011

துணியே அணி!--2

கைத்தறித் துணி என்று சொன்னதும்,
தாரு சுத்தறதும்,பாவு ஓடறதும்,தறி நெய்யறதும்,
கெண்டைவேட்டி,கெண்டைச் சேலை(சரிகை)என்றும்
புடவையா,வேட்டியா விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுவதும்
நினைவு வருகிறது!அரைகுறை நினைவிலேச் சொல்கிறேன்.
எங்க ஊரில்,கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் தறி நெய்வதில்
தேர்ச்சி பெற்று வாழ்ந்தனர்.
.

'சின்னச்சின்ன இழைப் பின்னிப்பின்னிவரும்
..சித்திரக் கைத்தறி சேலையடி நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி!'

கைத்தறி சேலையின் பெருமையை,
ஒரு கவிஞர் பாடிப் புகழ்ந்தார்!

பின்பு,சின்னாளப்பட்டில்,'பளப்பள' சேலைகள்
வண்ணங்களில் மிளிர்ந்தன.
சின்னாளப்பட்டி என்னும் ஊரில் சிறப்பாக நெய்யப்படும்
சேலைகள்.
பெண்களுக்குப் பாவாடைத்துணிகள்,
நல்ல பட்டுப்போன்றே கரைகள் வைத்து,
கட்டங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.


மில்துணிகள் வந்த காலத்தில்,
புடவைகள் கட்டு(பேல்)கட்டாக வந்து இறங்கும்.
எத்தனை கெஜம் புடவைக்குத் தேவையோ அத்தனை
கெஜம் அளந்து கட்செய்து வாங்கலாம்.(அப்போவெல்லாம்
6கெஜம் ஒரு புடவைக்கு)பின்புதான்,அப்படியே
புடவை,புடவையாக விற்பனைக்கு வந்தன.
எஸ்குமார்,விமல்,பாம்பே டையிங்,ரூபிக்வீன்,போன்ற
மில்கம்பனிகள் நிறைய வகைகளை அறிமுகப் படுத்தின.

தொடரும்...