Wednesday 8 February, 2012

புளிக்குழம்பு (இனிப்பு)


தேவையானவை
----------------


புளி எலுமிச்சங்காய அளவு.

சாம்பார் வெங்காயம் ஒரு கையளவு.(எந்த காயும் போடலாம்)

வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு.

குழம்பு பொடி இரன்டு ஸ்பூன்.

மஞ்சள்தூள், பெருங்காயம் சிறிது.

கறிவேப்பிலை 2 ஆர்க்.

தாளிக்க
-----------

நல்லெண்ணெய் ஒரு குழி கரண்டி.

கடுகு ஓர் ஸ்பூன்.

வெந்தயம் இரண்டு ஸ்பூன்.(மூன்றுஸ்பூனும் போடலாம்).

செய்முறை.
-----------------


அடுப்பில் வாணலியை ஏற்றி, நல்லெண்ணையை ஊற்றி, நன்கு காயவேண்டும்.

கடுகு, வெந்தயம் எண்ணெயில் வெடிக்க விடவேண்டும். வெடித்ததும், அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவேண்டும்.

மஞ்சள்தூள் சிறிது, பெருங்காயம் சிறிது போட்டு நன்கு கிளறி விடவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும், கரைத்து வைத்திருக்கும் புளிக் கரைசலை ஊற்றி, தேவையான உப்பும், குழம்பு மிளகாய்த்தூள் 2 ஸ்பூன், கறிவேபிலையையும் கிள்ளி குழம்புடன் சேர்க்கவும்.

நல்லெண்ணெயை ஊற்றி நன்கு கரண்டியால் கலக்கவேண்டும்.

இப்போது வெல்லம் 2 அல்லது 3 நெல்லிக்காயளவு சேர்த்தி கொதிக்கவிடவும்.

இப்போது இனிப்பு புளிகுழம்பு தயார்!

வெல்லம் (பிடிக்காதவர்கள்), போடாமலேயும் உபயோகிக்கலாம்

Wednesday 1 February, 2012

மோர்கூழ்!


தேவையானவை
============

ரவை-- 1கப்.

புளித்தமோர். ரவையோடு நீர்த்த, புளித்த மோர் சேர்த்து மிகவும் நீர்க்க இருக்கும்படி கரைத்து வைத்துக் கொள்ளவும்.


தாளிக்க========

நல்லெண்ணெய்-- சிறிய குழிகரண்டி.


கடுகு சிறிது,

கறிவேப்பிலை கொஞ்சம்,

பெருங்காயம் சிறிது,

கொத்துமல்லித்தழை கொஞ்சம் (பொடியாய் நறுக்கிகொள்ளவும்)

பச்சைமிளாய் 2 - நறுக்கி வைத்துக் கொள்ளவும்

மோர்மிளகாய் இருந்தால் வறுத்து கூழுடன் சேர்த்துக் கொள்ளலாம்

பெருங்காயம் சிறிது.

நெய்-- 4 ஸ்பூன்.

தேவையான உப்பு.


செய்முறை
========

அடுப்பில் வாணலியை ஏற்றி, (இதயம்) நல்லெண்ணயை விட்டுக் காய்ந்ததும், கடுகு வெடிக்க விடவும்.


பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் மோர் ரவையை, வாணலியில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.


இப்போது 2 ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும்.


ரவா மோர் கெட்டியாகி அல்வா பதத்துக்கு முன்னே இளகிய பதத்தில் இருக்கும் போது இன்னும் நெய் ஊற்றிக் கிளறி, இறக்கி வைக்கவும்.


தட்டில் நெய் தடவி சூடாக மோர்கூழை விட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.

Saturday 28 January, 2012

வாணலி உப்புமா!


வாணலி உப்புமா!

================

பச்சரிசி மா -- ஒரு கப்.(ஈரமில்லாத மாவு)

பெரிய நெல்லிக்காய் அளவு புளி.


தாளிக்க:
=========

நல்லெண்ணெய்-- 1குழி கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,

வரமிளகாய் 2.

பெருங்காயம் சிறிது.

கறிவேப்பிலை கொஞ்சம்.

தேவையான உப்பு.

பெரிய நெல்லிக்காய் அளவு புளி.


செய்முறை
========

வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து,

பிறகு பச்சரிசி மாவை, தாளிப்போடு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் வறுக்கவும்.

அரிசிமா பொன் நிறமாக ஆகும்வரை வறுக்கவும்

அரிசிமாவு பொன்நிறம் ஆனதும், புளிக்கரைசலை அதில் ஊற்றவும்.

இப்போது புளிக் கரைசலுடன், சேர்த்து நன்கு வறுக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

வாணலி மாவு தயார்!