Tuesday 30 December, 2008

Happy new year கொண்டாடுவோம்!!!!!!!!!!!!

புத்தாண்டு..
இப்பொ எல்லாம் party, dance get together நு life style மாறிடுத்து..

ஆனா.. அதெல்லாம் தெரியாத என் சின்ன வயதில்.. புது வருஷம் கொண்டாட்டமே வேற..

தாத்தா.. டிசம்பர் 31 ம் தேதியே.. newspaper எல்லாம் பேப்பர் காரனுக்கு போட அழகா எடுத்து வெச்சு..
ஜனவரி 1ம் தேதி பேப்பர் வரிசையா , மடிப்பு கலையாமல் வைக்க இடம் பண்ணிடுவார்..


அடுத்தது காலண்டர் எல்லாம் புது வாசனையோடு அந்தந்த ஆணியில் தொங்க விடுவார்..
சாமி காலண்டர், பஞ்சாங்க காலண்டர், scenery இருக்கிற காலண்டர் எல்லாம் ஒண்ணாம் தேதியை வரவேற்கும்


daily sheet ராத்திரி தூங்கும் முன்னாடியே ஒண்ணாம் தேதி கிழிக்கபட்டு விடியலுக்காக காத்திருக்கும் ...

ஜனவரி ஒண்ணு ... சீக்கிரமே எழுந்து குளித்து பூஜை பண்ணிவிட்டு ..
வெள்ளிக் காசு ,தங்க காசு அதோட பிள்ளையார் , லக்ஷ்மி சரஸ்வதி படமும் கையில் வெச்சுண்டு..

அதில் தான் கண் முழிக்கணும்னு எல்லாரும் நு .. அவருக்கு ஒரு system..
வருஷம் பூரா எல்லா நன்மைகளும் கிடைக்கணும்னு அவரோட வாஞ்சை இப்போ நினைத்தாலும்..இனிமையா இருக்கு..

பாட்டி.. தன் திறமையை சமையலில் காட்டுவா..
எல்லாரும் கூடி உட்கார்ந்து சந்தோஷமா போன வருஷம் நடந்த சம்பவங்களை அசைபோட்டு..

ஆஹா..
அந்த இயற்கையான கொண்டாட்டம் .. இப்பவும் என் மனதில் பசுமையா இருக்கு..

வாழ்க்கை ஓட்டத்தில்.. எல்லாம் மாறினாலும்..
இந்த நினைவுகள் எல்லாம் தான் மனதில் என்றும் நிலைத்து இருக்கு என்பதில் சந்தேகமே இல்லை..


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!

2 comments:

butterfly Surya said...

என்னதான் வசதிகளும் வாய்ப்பும் இருந்தாலும் பழைய நினைவுகளே என்றும் சுகமாக இருக்கிறது.

உங்க வலை நல்லாயிருக்கு..

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya.blogspot.com

Akila said...

சூர்யா அவர்களே..
உங்கள் வாழ்துக்களுக்கும் ஊக்கத்துக்கும் என் நன்றி...