Sunday 18 January, 2009

நினைவலைகளில்...!

என் அம்மா பாடிய பாட்டுகள்!

"அடுத்து வந்த என்னைத் தள்ளலாகாது!
அரஹரா என்று சொன்னாலும் போதாதோ?"


அம்மா சமையல் உள்ளே கணீரென்று பாடுகிறாள்!

புகைமண்டிய, எரியாத அடுப்பை ஊதி ஊதி களைத்து, இந்த மாதிரியான பாடல்களை அம்மா பாடுவதை நான் பலமுறைக் கேட்டிருக்கிறேன்...

"சம்போ! கங்காதரா! சந்ரசேகரா! ஹரஹர!"

ஏதாவது கஷ்டமான சூழ்நிலைகளில் அம்மா பாடுவதை பல நேரந்க்களில் கண்டு கேட்டிருக்கிறேன்!

"கண்டாமணி ஆடுது! கண்டுபிணி வாடுது!"
"சிவலோக நாதனைக் கண்டு சேவித்திருப்போம்! வாரீர்!"


"உடலைவளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே!" திருமூலர் பாடல்!

"வெட்டவெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்கடி!குதம்பாய்!"
போன்ற குதம்பை சித்தர் பாடல்!

"தாரகமே நீ பாரு! பவந்தாண்டியே கரை சேரு! மனமே! (தாரகமே)

இன்றைக்கு இருப்பார் நாளைக்கு காணோம்
நிலையில்லாக் காயம் மனமே!"


யார் பாடல்?தெரியாது!

இப்படியோர் பாடல்!

"மோசம் போகாதே! மனமே! மோசம் போகாதே!
ஒன்பது வாசலின் கூடு!
உற்று பார்த்தால் மலக்காடு!
துன்பதிற்காகிய வீடு!
இந்த துற்புத்தியைத் தள்ளி போடு!"


தேசபக்தி பாடல்கள் நிறையப் பாடல்கள் அம்மா பாடி கேட்டிருக்கேன்!

"பொழுது புலர்ந்தது! யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்!"


பெண்விடுதலைக் கும்மி பாடல்

" ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை யென்றெண்ணியிருந்தவர்
மாய்ந்து விட்டார்!"

"கற்பு நிலை யென்று சொல்ல வந்தால்
இருகட்சிக்கும் அஃதை பொதுவில் வைப்போம்!"


சிறப்பாகப் பாடுவாள்!

"கனிந்து வந்தேமாதரம் ஓதும்...
...லோகமான்ய பால கங்காதரத் திலகமே!
அஞ்சாத பால கங்காதரத் திலகமே!"

"காந்தி லண்டன் சேர்ந்தார் கைகூப்பித் தொழுவீர்!"

"கதர்கொடி கப்பல் தோணுதே!",


திருமதி சுந்தராம்பாள் பாடியது என நினைக்கிறேன்!

வள்ளலார் பாடல், தண்டலையார் சதகம், எல்லாம் அம்மா எப்படி எப்போது படித்து தெரிந்து கொண்டாளோ !

இதைத் தவிர கும்மி, கோலாட்டப் பாடல், கண்ணன் ஓடக் கும்மி, போன்ற பாடல்களும் அம்மா ஆசையாகப் பாடிக் காட்டியிருகிறாள்!

இன்னும் இன்னும் நிறைய! மும்மூர்த்திகளின் சில பாடல்களும் அம்மா பாடி கேட்டிருக்கிறேன்! என்னுடைய 30 களில்!

"மதுரைக் கரசியான கண்மணி!
மாட்சிசேர் மீனாட்சி அம்மணி!
சதுர்முகனோடு முனிவர் பணியும்
தாரணி! நாரணி1!பூரணி!காரணி!"


இன்னொரு பாடல்...

"தருவாய்!நல்வரம்!தாயே!வாணி!
தருண மிதுனதடிச் சார்ந்தெமைப் பேணி!
குருவாய் உலகில் குறை தவிர்த்திடவே
தருவாய் குருகிய மதி வினைக் கெடவே!"


பாபனாசம் சிவன் பாடல்களும் அம்மாவின் விருப்பமாகும்.

என் சிறியவயதிலிருந்து அம்மா பாடுவதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் என்பதை நினைப்பதே எனக்கு இன்றைக்கும் மகிழ்ச்சியை தருகின்றது!

2 comments:

Venkat said...

Dear Atthai,

There are few Super humans who spend their life to dissolve their Karma and go back from where they came. They have no more birth and they become one with the Aehan, Anehan.

Rajamma Patti is one such soul.I am blessed to have spent the time with her.

You, needless to say are the re incarnation of Patti. All Dilip's words are not only for patti, but also for you.

Bless us with your exuberant love atthai.

Thangamani said...

அன்புள்ள மணி!
பாட்டியைப் பற்றி உணர்ந்து சொன்னாய்!
அந்தக் கால நினைவுகள் இனிமையானது!
என் மனப்பூர்வமான ஆசிகள் எப்போதும்
உண்டு.

அன்புஅத்தை,
தங்கமணி.