Saturday 4 April, 2009

நம்மாழ்வார் திருவாய்மொழி

சீலைக் குதம்பை யொருகா தொருகாது செந்நிற மேல்தோன் றிப்பூ கோலப் பணைக்கச்சும் கூறை யுடையும் குளிர்முத்தின் கோடா லமும்
காலிப் பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்!
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றா ருமில்லை.



என்மனசைக் கவர்ந்த பாடல்!

ஒருநாள் இனியக் காலைப் போது!

அதோ அந்த யாதவச் சிறுவர்கள் மாடுகளுடன் மேய்ச்சலுக்கு கிளம்புகின்றனர்!

"என் கண்ணனும் உங்களுடன் வருகிறான்! பத்திரமாக அழைத்து போங்கள்!" என்று பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறாள் யசோதை!



நேரம் செல்லுகிறது...... மாலை வந்தது!

வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கிறாள்!

குழந்தை கண்ணன் வருகைக்காக காத்திருக்கிறாள்!

ஆயர்குலப் பிள்ளைகளுடன் அதோ வந்து கொண்டிருக்கிறான் கோவிந்தன்!

எப்படி வருகிறானாம்?

யசோதை கூவுகிறாள்!

"அடி கோபிகைகளே!

சேலைத்துணியைக் காதணியாய்க் கொண்டு ஒருகாதிலும்,

செந்நிற மருதோன்றிப்பூ காதணியாய் மற்றொரு காதிலும்
அணிந்து,

அழகான இடுப்பில் கூறை ஆடையைக் கச்சாக அணிந்து,

முத்தினாலான ஒருவகைக் கழுத்தணியும் அணிந்து,

அந்த யாதவப் பிள்ளைகளிடயே ஒரு தனி அழகோடு விளங்குகின்ற

கடல்வண்ணனின் வேடத்தை பாருங்களேன்!"




இப்போது யசோதை என்ன சொல்லப் போகிறாள்?

எந்த தாயும் "அவன் என் பிள்ளை!" என்றுதானே சொல்வர்?

நாமும் அதைத்தானே எதிர்பார்க்கிறோம்?

ஆனால்...? யசோதை என்ன சொல்கிறாள்?

"ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை."

இந்தப் பிள்ளையைப் பெத்தவள் வேறு யாருமில்லை நானேதான்!

பிள்ளையைப் பற்றி சொல்லிவிட்டு, அந்த பிள்ளை ' என்னுடைய் பிள்ளை' எனலாம்.

ஆனால், பிள்ளையைப் பற்றி மகிழ்ந்து விவரித்து விட்டு, அந்தப் பிள்ளயின் தாய் என்னும் போது, இப்படி எண்ணத் தோன்றுகிறது:

"பெறற்கரிய பேறுடையவனின் தாய் நான்!" என்ற புளகாங்கிதம்
யசோதையின் கூற்றில் தெரிகின்றது!

அருமையான பாசுரம்!

அன்புடன்,
தங்கமணி.

3 comments:

butterfly Surya said...

அருமை.. அருமை..

வாழ்த்துகள்.

Thangamani said...

மகிழ்வுடன் மிக்கநன்றி!
அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

//மிகவும் நன்று//

உங்கள் வரவுக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.