பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவது என்பது இன்று ஒரு பெரிய சாதனைதான்!
இருக்கட்டும்....
பிறந்த மழலையைக் காண்பது மனசுக்கு உற்சாகமும், புத்துணர்ச்சியும் தருகிறது!
நாமும் குழந்தையாய் ஆகி விடுகிறோம்!
அதோ ஒரு தாயின் தாலாட்டு....கேட்போம்!
மரத்தடி நிழலில் தூளியில் தூங்க வைத்து, பின் வயல் வேலைக்குச் செல்லும் ஒரு ஏழை தாயின் பாடல்!
குழந்தைக்கு இயற்கை தரும் வசதியிலே உறங்கச் சொல்லும் தாயின் தாலாட்டில், மன உணர்வுகளை இதைவிட எளிதாக, அழகாகச் சொல்ல முடியுமோ?
கண்ணுறங்கு,கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
வண்ண மருக்கொழுந்தே
மல்லிகையே கண்ணுறங்கு!
வேப்பமரக் காத்துப்பட்டா
வேறுவினை சேராது!
காப்பா மகமாயி
கண்ணுறங்கு என்மகனே!
பாலுனக்கு வேணுமின்னு
பாடுபடப் போறேண்டா
காலுதச்சு நீயழுதா
கண்ணீர் வருகுதடா!
நாலெழுத்து நீபடிச்சு
நஞ்சைபுஞ்சை வாங்கோணும்
பால்கொடுத்த ஆத்தாவுக்கு
பட்டுசேலை எடுக்கோணும்!
நீசிரிச்சா நான்சிரிப்பேன்
நீயழுதா நானழுவேன்
ஆசைவச்சேன் உன்மேலே
அழவேணாம் கண்ணுறங்கு!
கவிமாமணி இலந்தை அவர்களின் பாடல்.
மிக்க நன்றி!
(தொடரும்)
Friday 26 June, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment