Monday 8 March, 2010

பெண் !




"அம்மா! ராத்திரி நான் தூங்கும்போதும் வீட்டுவேலைன்னு எங்கிட்ட படுத்துக்க மாட்டே!

காலையிலும் வேலைன்னு நான் முழிச்சுக்கும்போது, பக்கத்துலே இருக்க மாட்டே!"

இது ஒரு பெண் குழந்தையின் புலம்பல்!

"ஷூவை இப்படி போட்டுண்டு, நாடாவை இப்படி கட்டு!" என்று ஜாடையில் சொல்லித் தரும் அம்மா!

நான்கு வயதுக் குழந்தைக்கு அம்மா கிடைக்க மாட்டாள்!

அப்போதெல்லாம் பெரியவர்களுக்காக (அம்மா) மடியாய், ஆசாரத்துடன் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம்!

வேலைக்குப் போகும் அம்மாதான் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை என்று இல்லை!

வீட்டில் இருக்கும் அம்மாவும் குழந்தைகளுக்குக் கிடைப்பது கஷ்டம் என்று அப்போது இருந்த காலம் உண்டு!



பெண் என்பவள் தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் வாழ்ந்து சகாப்தம் படைத்திடுவாள்!

பெண்மை, அன்பில் ஒளிர்கின்றது!

பெண்மை பொறுமையில் மிளிர்கின்றது!

இன்றைய பெண்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கொள்ள வேண்டும்!

அதனால் உயர்வே அன்றி தாழ்வு வாராது!



இன்றைய ஆண்கள் பெண்களுக்கு விட்டுக் கொடுக்கின்றனர்!

இரு கண்களாக ஆணும், பெண்ணும் அனுசரணையாய் வாழ்வதுதான் நிறைந்த வாழ்வாகும்!

பெண்ணின் பெருமையே பெருமை!

தனித்துவம் வாய்ந்து உயர்வினில் வளர்வது!!

பெண், குடும்பத்தை அரவணைத்து அன்பு செலுத்துவாள்!

குடும்பத்தில் அவளுக்கென இருக்கும் இடத்தை, யாராலும் நிரப்பிவிட முடியாது!

அவளுக்கு நிகர் அவளே!

இன்றைய நாகரீக உலகினில், பெண், ஆணுக்கு நிகராய் வானில் பறந்து, மண்ணில் அலைந்து வீடு காத்து, நாடும் காக்கின்றாள்!

"பெண்மை வெல்க!" என வாழ்த்துவோம்!

No comments: