Saturday 29 May, 2010

உணர்வுகள்..!

உணர்வுகள்..!

ஞாபகசக்தி என்பது ஒரு வரமோ? சாபமோ?

இரண்டும் தான்!!

மனதில் எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது..

ஏதோ ஒன்றை நினைக்கத் தொட்டுத் தொடர்ந்து போய்கொண்டே இருக்கிறது....

உறவுகளில் தெரியும் முரணோ, பாசமோ..

நாம் பார்த்த சினிமாவைப் பற்றியோ, கண்ணில் பட்ட காட்சியைப் பற்றியோ

படித்த புத்தகத்தினால் பாதிக்கப் பட்டோ

சிந்திக்கையில் எழும் நினைவு...அதனால் தோணும் உணர்வுகள்...பலவிதம்..

வீரத்தில், பக்தியில், காதலில், கருணையில், அன்பினில்...உயர்ந்திடும் உணர்வுகள்!

வீரத்தில் சிலிர்த்தெழுந்திடும் உணர்வு!

பக்தியில் நெக்குருகி நெகிழ்ந்திடும் உணர்வு!

காதலில் தவித்திடும் உணர்வு!

கருணையில் கனிந்திடும் உணர்வு!

அன்பினில் அடங்கிடும் உணர்வு!

கோபத்தில், பொறாமையில், வெறுப்பில், சினத்தில்...தோன்றும் உணர்வுகள்!

கோபம் வந்தால் அதன் வழியேச் சென்று கோபம் கொள்ளலாம்..

பொறாமை வெறுப்பு வரும்தான்!

ஆனால், நிதானமாக யோசித்துப் பார்த்து அவற்றை வராமலிருக்கும் வழியை முயல வேண்டும்.

மனிதருக்குள்ளே தோன்றும் நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பக்தி உணர்வை விளக்கும் தேவாரப் பாடல் ஒன்று நினைவில்:

விறகில் தீயில்நன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.


(விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்)

No comments: