Monday 7 June, 2010

கண்ணா! என் கண்மணியே!

ராமு கதை சொல்கிறான்.

ரொம்ப ஆர்வமோடு குழந்தைகள் கதை கேட்கிறார்கள்..

பின்னாலே தளர்நடை பயின்று ஓர் பாலகன் கண்விரிய...வாய்மலர்ந்து...வருகிறான்!

கதையில் வரும் காக்காய் தாகத்துக்கு தண்ணீர் வேண்டும் என்று "கா கா"ன்னு கத்தறது!

அப்பிடீன்னு சொல்லிக் கொண்டே பின்னால் திரும்பி பார்க்கிறான் ராமு.

கதையை இன்னும் சுவையாகச் சொல்லச் சொல்ல அந்த பாலகன் ராமுவின் முதுகில் சாய்ந்து, கழுத்தை வளைத்து ராமுவையே பார்த்துக் கொண்டிருந்தான்!

கதையில்....

காக்கா மூக்காலே ஒவ்வொரு கல்லாகக் கொத்திக் கொண்டுபோய்.... ஜாடியில் போட்டது....

தண்ணீரும் மேலே வந்துவிட்டது. காகமும் தாகம் தீரக் குடித்தது!

காகம் பறந்து போனது!

கதையும் முடிந்து போனது!

எல்லாக் குழந்தைகளும் கைத் தட்டி மகிழ்ந்தன!

இப்பொழுது ராமு பாலகனைப் பார்க்கிறான்!

ராமுவின் முதுகைக் கட்டிக்கொண்டிருக்கும் அழகில் லயித்துப் போகிறான்!...

பெரியாழ்வார் திருமொழி நினைவுக்கு வருகிறது!

கிண்கிணிக் கட்டி கிறிகட்டி கையினில்
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து
என்கண்ணன் எனைப்புறம் புல்குவான்

ஆயர்களேறெனைப் புறம்புல்குவான்.

No comments: