Friday 1 July, 2011

துணியே அணி!--2

கைத்தறித் துணி என்று சொன்னதும்,
தாரு சுத்தறதும்,பாவு ஓடறதும்,தறி நெய்யறதும்,
கெண்டைவேட்டி,கெண்டைச் சேலை(சரிகை)என்றும்
புடவையா,வேட்டியா விற்பனைக்கு எடுத்துச் செல்லப் படுவதும்
நினைவு வருகிறது!அரைகுறை நினைவிலேச் சொல்கிறேன்.
எங்க ஊரில்,கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் தறி நெய்வதில்
தேர்ச்சி பெற்று வாழ்ந்தனர்.
.

'சின்னச்சின்ன இழைப் பின்னிப்பின்னிவரும்
..சித்திரக் கைத்தறி சேலையடி நம்ம
தென்னாட்டில் எந்நாளும் கொண்டாடும் வேலையடி!'

கைத்தறி சேலையின் பெருமையை,
ஒரு கவிஞர் பாடிப் புகழ்ந்தார்!

பின்பு,சின்னாளப்பட்டில்,'பளப்பள' சேலைகள்
வண்ணங்களில் மிளிர்ந்தன.
சின்னாளப்பட்டி என்னும் ஊரில் சிறப்பாக நெய்யப்படும்
சேலைகள்.
பெண்களுக்குப் பாவாடைத்துணிகள்,
நல்ல பட்டுப்போன்றே கரைகள் வைத்து,
கட்டங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.


மில்துணிகள் வந்த காலத்தில்,
புடவைகள் கட்டு(பேல்)கட்டாக வந்து இறங்கும்.
எத்தனை கெஜம் புடவைக்குத் தேவையோ அத்தனை
கெஜம் அளந்து கட்செய்து வாங்கலாம்.(அப்போவெல்லாம்
6கெஜம் ஒரு புடவைக்கு)பின்புதான்,அப்படியே
புடவை,புடவையாக விற்பனைக்கு வந்தன.
எஸ்குமார்,விமல்,பாம்பே டையிங்,ரூபிக்வீன்,போன்ற
மில்கம்பனிகள் நிறைய வகைகளை அறிமுகப் படுத்தின.

தொடரும்...

No comments: