Friday 29 July, 2011

ஆடையே அணி!-- 3

ஆடைகள் மக்களின் கலாசாரத்தைச்
சொல்கின்றன.

இன்று
விதவிதமான ஆடைகள்!
பார்க்கும் உத்தியோகத்திற்கேற்ற உடைகள்!
வழக்கறிஞர்,நீதிபதி,டாக்டர்,இவர்களுக்கான ஆடைகள்....
பள்ளிச் சிறார்களுக்கான யூனிபார்ம்...

பலவகைப் பண்பாடுடைய மக்கள் அணியும் பாரம்பரிய ஆடைகள்
அந்த அந்த விசேஷங்களுக்கான ஆடைகள்,
திருமணச் சடங்கு போன்றவைகளில் அணியும் ஆடைகள்!
பெண்களுக்கென்று அழகான வண்ணமான ஆடைகள் கண்கவரும்.
கவுன்,பாவாடை,தாவணி,புடவை என்று உண்டு.

மேலைநாட்டு நாகரிகம் நம் ஆடைகளில் வந்துவிட்டது.
காலத்திற்கேற்றக் கோலமாக மட்டுமல்ல,இன்றைய அவசியமாகவும்
பெண்களின் ஆடைகள் ஜீன்ஸ்,ஷர்ட்
என்றாகிவிட்டது.அதையும் நமக்கு ஏற்றவிதமாக அணியலாம்.
இன்றைய ஊடகங்களில் ஆண்,பெண் சிறார் ஆடைகள் பற்றிய
விளம்பரங்கள் புதுமையாக ஆட்டமும் பாட்டுமாகக்
காணக் கிடைக்கின்றன!

நடை , உடை. பாவனை, என்பதில் உடையின் முக்கியத்தை அறியலாம்.
ஆள் பாதி,ஆடை பாதி என்பது சொலவடை.
மகாத்மா காந்தி அவர்கள்'அரை சந்நியாசி' என ப்பட்டார்.
ஏனெனில் அவர் வேட்டி,துண்டில் தான் இருப்பார்.
ஏழையர்க்காக வேட்டி அணிந்தவர்.
"உடுக்கை இழந்தவன் கைபோல" என்று வள்ளுவனார்
மானம் காக்கும் ஆடையைப் பற்றி நட்பின் அருமையைக் கூறும்
இடத்தில் குறிப்பிடுகிறார்.

பெண்கள் அணியும் சீலை சீலை,புடவை,கூ றை,சீரை எனப்படும்.
மடி என்றும் ஆடைக்கு பெயருண்டு.
எனக்கு ஆடையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது!பகிர்ந்து கொண்டேன்

No comments: