Sunday 16 October, 2011

திரைப் படம்!

திரைப்படங்கள் மக்களின் பொழுதுபோக்காக மட்டும்
இல்லாமல் சிந்திக்கச்செய்வதாகவும் இருக்கின்றன.
கண்ணகி,மணிமேகலை போன்ற காவியங்களும், திரையில்
உலா வந்தன. இதிகாச பக்தி இலக்கியங்களும் திரையில் பவனி வந்தன.
வரலாற்றுக் காவியங்கள் அன்றையக் கால நிலையைக் காட்டுவதாய் அமைந்தன.

சமூகப் பிரச்சினைகள் வாழ்க்கையாய் சொல்லப்பட்டன.
பலவகைகளிலும் திரைப்படம் முக்கிய ஊடகமாக இருந்தது.வானொலியும் வந்தது.
நாளேடு,வார,மாத சஞ்சிகைகள்,புதினம், ஊடகங்களாக இருந்தபோதிலும்,
பட்டி தொட்டி யெங்கும் பாமரர்களிடை அதிவிரைவாக எடுத்துச்சென்ற ஊடகம்
திரைப்படம்தான்.
இசைக்கு முக்கியத்துவம் கிடைத்தது.திரையிசை எல்லோராலும்
இரசிக்கப்பட்டு பாடப்பட்டன.அதனாலேயே வானொலியில் 'திரையிசைப் பாடல்'
ஒலிபரப்பப் பட்டது.

No comments: