Monday 10 October, 2011

எழுது!எழுது!நிறைய எழுது!

எழுதுவது என்பது அழகிய கலை. உணர்வுகளைச்
சொல்வதுபோல் வார்த்தைகளாய் வரையும் ஓவியம்.
அதுவேபண்பட்ட,அனுபவத்தில் விளைந்த எழுத்துஓவியம்
காவியமாகின்றது.

ஒன்றும் எழுதத் தெரியாமல் இருக்கும் எனக்கு, எழுதவேண்டும் என்னும்
பசிக்குத் தீனியாக இந்த இணையதளம் உதவுகிறது.
வெள்ளைத்தாள்,எழுதுகோல் கண்டால் ஏதாவது எழுதவேண்டும்
என்ற எண்ணம் பரபரக்கும்...
அன்றைய தலைமுறைக்கும்,இன்றைய தலைமுறைக்கும்
இடைப்பட்ட மாறுதல்கள்,மாற்றங்கள் எல்லாவிதத்திலும் உண்டு.
வளர்ச்சிகளாகப் பார்க்கிறோம்.நிலைத்தடுமாறச்செய்யும்
மாற்றங்களும் உண்டு.
பழையனக் கழிதலும்,புதியனபுகுதலும் மரபு.
ஏற்றுக்கொண்டாலும்,கொள்ளாவிடினும் நடப்பது நடந்து போகும்.

இருப்பினும்,டூரிங்டாக்கீஸிலிருந்து,
இன்றையதியேட்டர் திரையரங்குவரை
காட்சிகளாய்க்காண்பதெல்லாம்,வாழ்வியல்கலாசாரம்,பண்பாடு,
சமூக அவலங்கள்,அறிவியலின்பங்கு,போன்ற
பலவற்றையும் கண்டு அறியச்செய்யும் துறைகளில்,
திரைப்படங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

No comments: