Sunday 4 December, 2011

திரைப்படம் -- 3.

திரைப்படம்....அந்தநாளிலிருந்து, என்று துவங்கியிருக்க வேண்டுமோ ?

ஆம். நிறைய மாற்றங்களை...பிரதிபலித்திருக்கிறது!

ஆடை,அணிகள் புழங்கும் சாதனங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்....

அன்று பாட்டு கேட்கவேண்டும் என்றால், வீட்டில் கிராமபோன் பெட்டி வைத்திருப்போர் தான் கேட்க முடியும்.

திரையரங்கில் ஒலிபெருக்கியில் கேட்கும் தூரத்து ஒலியாய்ப் பாடலைக் கேட்டிருக்கிறோம்.

பிறகு ரேடியோ என்னும் வானொலி வந்தது.

இதனால் பக்திப் பாடல்,சினிமாப் பாடல்,கர்னாடக சங்கீதம், நாட்டுப்புறப் பாடல் என்று கேட்க முடிந்தது.

மேடையில் இன்னிசை நிகழ்ச்சிகள் மக்களால் விரும்பி கேட்கப் பட்டன.

நிறைய சிறப்பாக தமிழிசை, கர்னாடக இசை இவையெல்லாம், கதைபோக்கோடு திரைப்படத்திலும் காட்சியாக்கப் பட்டன

வீடு என்றுகாட்டும்போது, கூடத்தில் மேசையின்மீது 'ரேடியோ' காட்டப்படும். அது ரேடியோக் காலம் என அறியலாம்.

பின்பு டெலிவிஷன் வந்தது.

அதுவும் திரையில் காணப்பட்டது....

அன்று ஆட்டுரலில் மாவரைப்பது, கிணற்றில் வாளியில் நீர் இறைப்பது

இன்று கிரைண்டர், மிக்ஸியில் அரைப்பது....பைப்புகளில் நீர் வருவதால் எல்லாத்தேவைகளும் எளிதில் முடிகின்றன.

சமையலறையில்.... அன்று விறகடுப்பு, குழலூதும் புகையில் கதாநாயகியைக் காட்டுவார்கள்.

பிறகு, மண்ணெண்ணை ஸ்டவ்விலிருந்து கேஸ் அடுப்பு வந்தது. இதையும் திரைப்படத்தில் சமூக வாழ்வியல் சார்ந்த படங்களில் கண்டோம்.

பெல்பாட்டம், ஸ்டெப் கட், என்றெல்லாம் இளைஞர்கள் அணிவதும் நாகரீகமாக இருந்தது.

No comments: