Monday 26 December, 2011

திரைப்படம்--4

'கருப்பு-வெள்ளை' திரைப்பட காலத்தில், நடனகாட்சி, கனவு காட்சி கலரில்....என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும்.

வண்ணப்படம் பார்க்க மக்கள் ஆர்வமாகச் செல்லுவார்கள்.

நாமிருவர் படத்தில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "வெற்றி எட்டு திக்குமெட்ட கொட்டு முரசே" என்ற பாரதியார் பாடல்கள் கமலாலக்ஷ்மணன் நடனம். மிக அழகாக சிறப்பாக, இருக்கும்.

தரை டிக்கெட் அப்போது,இரண்டரையணா. நான்கு பாகம். இரண்டு பாகத்திற்கு பிறகு 'இண்டர்வெல்' விடப்படும்.

கொட்டகையாக இருப்பதால், மழைக்கு ஒழுகும். சாரலடிக்கும். படம்பார்க்க முடியாது.

அப்பாவிடம் , சினிமாக்குப் போறோம்!னு சொல்லும் போதே, காசு கொடுத்து அனுப்புவார்.

சிலசமயம் கோவிச்சுப்பார்...

உள்ளூற பயத்துடனும், குற்ற உணர்வுடனும்தான் சினிமா பார்த்திருக்கோம்.... அது ஒரு காலம்..

சினிமாபற்றி எல்லோருக்கும் தெரிந்ததுதான்...

திரைப்படத்துறையில், நடிப்பு என்பதுடன் படப்பிடிப்பு, நடனம், இயக்கம், வசனம், திரைக்கதை என்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன...

சரித்திரக் கதையா...அதற்குண்டான ஆடை,ஆபரணங்கள், அரண்மனை,போர்க்களம், போன்றவைகளின் அமைப்பு (கலை இயக்குனர்) வேண்டும்.

பக்தி படமா...அதற்குண்டான கோவில்,தெருக்கள், குளம் போன்ற அமைப்பு வேண்டும்.

இப்போது நிறைய அறிவியல் முன்னேற்றம் கண்ட காலமிது.

எல்லோரும் அறிவீர்கள்....

திரைத்துறையிலும் நிறைய சாதனைகள் பெருகி வருகின்றன..

சாதனையாளரை வாழ்த்துவோம்!

1 comment:

Akila said...

karuppu vellaiyil aarambithu .. kali kaalam varai alasal arumai..