Saturday 28 January, 2012

வாணலி உப்புமா!


வாணலி உப்புமா!

================

பச்சரிசி மா -- ஒரு கப்.(ஈரமில்லாத மாவு)

பெரிய நெல்லிக்காய் அளவு புளி.


தாளிக்க:
=========

நல்லெண்ணெய்-- 1குழி கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,

வரமிளகாய் 2.

பெருங்காயம் சிறிது.

கறிவேப்பிலை கொஞ்சம்.

தேவையான உப்பு.

பெரிய நெல்லிக்காய் அளவு புளி.


செய்முறை
========

வாணலியில் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து,

பிறகு பச்சரிசி மாவை, தாளிப்போடு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் வறுக்கவும்.

அரிசிமா பொன் நிறமாக ஆகும்வரை வறுக்கவும்

அரிசிமாவு பொன்நிறம் ஆனதும், புளிக்கரைசலை அதில் ஊற்றவும்.

இப்போது புளிக் கரைசலுடன், சேர்த்து நன்கு வறுக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.

வாணலி மாவு தயார்!

No comments: