எனது சின்ன வயசில் சங்கு, ஜிங்கிலி போன்றவை நாளேடுகளாய் வந்தன.
கல்கண்டு, கண்ணன், அம்புலிமாமா போன்ற சிறியவர்களுக்கான புத்தகங்கள் சிறுவர், சிறுமியர் விரும்பிப் படித்தனர். பெரியவர்களுங்கூட!
10-12 வயசிலே கல்கியின் "சிவகாமியின்சபதம்" படிச்சிருக்கேன்! எல்லாம் புரியணும்னு இல்லை. கதை போக்கா புரிஞ்சிண்டு படித்தேன்!
"அலை ஓசை" என்னுடைய 15 வயசிலே கல்கியில் தொடராக வந்தது! வாரா வாரம் எதிர்பார்ப்புடன் படித்தேன்!
அப்போது ஓவியங்கள் கதைகளுக்கு உயிரூட்டும்!
சந்திரா, மணியம், சாமா, இன்னும்.. இன்னும்... மம்ம்ம்.. ராம்கி, ஸ்வாமி... விகடனில், கோபுலு, சிம்ஹா, உமாபதி, மாயா..
விகடனில், லக்ஷ்மி, தேவன், போன்றோரின் புதினங்களைப் படித்திருக்கிறேன். அப்புறம்...நிறைய எழுத்தாளர்கள் கதைகள் ... ராஜம்கிருஷ்ணன், ஜெயகாந்தன், வாஸந்தி, இந்துமதி, தி.சா.ராஜு (கலைமகளில்) படித்திருக்கிறேன்.
வீட்டிலே சுண்ணாம்பு அடித்தால், எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி!
மேலே உயரத்தில் பலகையில் இருக்கும் புத்தகங்கள் கீழே இறக்குமதி ஆகும்! வீட்டின் முற்றத்தில் இறக்கி வைக்கப் படும்.
பழைய தீபாவளி மலர் ஏடுகளாய் அடுக்கியிருக்கும். ஆர்வத்தோடு பார்ப்பதில், படிப்பதில் ஒரு இனிமை!
என் பிள்ளைகள் முத்துகாமிக்ஸ், வேதாளம், அப்புசாமி-சீதாப் பாட்டி(பாக்கியம்ராமசாமி)கதைகள் ( சப்தமாக சிரித்துக்கொண்டே படிப்பர்)
குமுதம்,விகடனும் கூட..
படிக்கும் பழக்கம் இருந்தால் பிற்காலத்தில் நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வழிகாட்டும்.
புத்தகம் படிப்பது என்பது நம் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாய் துணை செய்யும்.
உள்ளத்தை செம்மைபடுத்தும்.
இன்று நம் இளைஞர்கள் படிக்கும் வழக்கத்தையும் அவர்களின் அன்றாடப் பணிகளில் ஒன்றாக செயல் படுத்தவேண்டும்.
அன்புடன்,
தங்கமணி.
Tuesday 12 August, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாசிக்கும் பழக்கம்..
வாசனை மறந்து போன..
வளரும் சமுதாயத்திற்கு..
வழிகாட்டும் ஓர் பதிவு..
அன்பு அகிலா!
நன்றாய் கவிதையில்
நயமுடன் சொன்னாய்!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment