Wednesday 1 February, 2012

மோர்கூழ்!


தேவையானவை
============

ரவை-- 1கப்.

புளித்தமோர். ரவையோடு நீர்த்த, புளித்த மோர் சேர்த்து மிகவும் நீர்க்க இருக்கும்படி கரைத்து வைத்துக் கொள்ளவும்.


தாளிக்க========

நல்லெண்ணெய்-- சிறிய குழிகரண்டி.


கடுகு சிறிது,

கறிவேப்பிலை கொஞ்சம்,

பெருங்காயம் சிறிது,

கொத்துமல்லித்தழை கொஞ்சம் (பொடியாய் நறுக்கிகொள்ளவும்)

பச்சைமிளாய் 2 - நறுக்கி வைத்துக் கொள்ளவும்

மோர்மிளகாய் இருந்தால் வறுத்து கூழுடன் சேர்த்துக் கொள்ளலாம்

பெருங்காயம் சிறிது.

நெய்-- 4 ஸ்பூன்.

தேவையான உப்பு.


செய்முறை
========

அடுப்பில் வாணலியை ஏற்றி, (இதயம்) நல்லெண்ணயை விட்டுக் காய்ந்ததும், கடுகு வெடிக்க விடவும்.


பச்சைமிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்துத் தாளித்து, கரைத்து வைத்திருக்கும் மோர் ரவையை, வாணலியில் ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.


இப்போது 2 ஸ்பூன் நெய் விட்டுக் கிளறவும்.


ரவா மோர் கெட்டியாகி அல்வா பதத்துக்கு முன்னே இளகிய பதத்தில் இருக்கும் போது இன்னும் நெய் ஊற்றிக் கிளறி, இறக்கி வைக்கவும்.


தட்டில் நெய் தடவி சூடாக மோர்கூழை விட்டு சாப்பிடச் சுவையாக இருக்கும்.

4 comments:

Akila said...

super amma..
kalakarel

Thangamani said...

அன்பு அகிலா,
உன் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!

Akila said...

amma..
sweet pulikozhambu recipe podungo

Thangamani said...

இனிப்புப் புளிகுழம்பு எழுதுகிறேன்.
நன்றி அகிலா!