Sunday 5 October, 2008

காந்தி தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள்!

.
காந்தி தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள்!

வீட்டில் காந்திமகானின் படம்! ஓட்டைப் பல் தெரிய சிரிக்கும் அழகு!

அன்னை கஸ்தூரி பா அவர்களின் படம்! கைகூப்பி வணங்கும் முறையில் அமைந்தது!

மனதுக்கு நிம்மதி கிடைப்பது போல் உணர்வேன்!

போராட்டத்தில் ஒரு அமைதியான வாழ்வு! பேரலைக் கடலிடையிலும் அமைதி உண்டே! அது போல!

காந்திஜியை எண்ணி நெகிழ்வதில் சினிமாவின் பங்குண்டு.

தினசரி, பத்திரிகைகள், ஆல் இந்தியா ரேடியோவிற்கும் பெரும் பங்குண்டு!

பாடல்கள், நாடகங்கள் மூலமாகவும் காந்தி அண்ணலை அறிஞ்சுக்க முடிந்தது!

"நாமிருவர்" திரைப் படத்தில், சிறுமியாக இருக்கும் போதே "மஹான்! காந்தி மகான்!" என்ற பாடலில் கமலாவின் நாட்டியத்தில், பாடலில் நெகிழ்ந்தேன்!

ஒற்றுமையை வலியுறுத்தும் பாடலான "சீலமிகும் ஒற்றுமையுற்றோமே! இனிநாமே பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே!"

கருணாமூர்த்தி காந்தி மகானை பணிந்து பாடும் பாடல்!

என்.எஸ்.கே, டி.ஏ.மதுரம் அவர்களின் நாடகம் தமிழகம் மறக்காது!

"மதுவை ஒழிப்போம்! மதியை வளர்ப்போம்!" என்றும்,

"குடி கெடுத்த குடி ஒழிஞ்சுது!
அடிதடி சண்டை அதும் கொறஞ்சுது!
ஆணும் பெண்ணும் புத்தி அறிஞ்சுது!
எங்க நாட்டிலே அக்டோபர் ரெண்டுக்கு மேலே!"

என்ற பாடல் சொல்வது போல குடியை ஒழிக்க வந்த மகானல்லவா?

காந்திஜி , ஒரு வெள்ளிக் கிழமை மாலை பிரார்த்தனையின் போது குண்டடி பட்டு இறைவனடி சேர்ந்தது செய்தியாய் பரவின!

எங்கள் ஊரில் ஒரு மாடிவீட்டில் ரேடியோவில் ஒலிபெருக்கியை இணைத்து அன்று முழுதும் கேட்டுக் கொண்டே இருந்தோம்!

என் அம்மா சாப்பிடாமல் வருத்தத்துடன் கண் பனிக்க கேட்டுக் கொண்டிருந்தார் நானும் அம்மாவுடனே இருந்தேன்!

தகனத்திற்குப் பின் ஒரு வெறுமை!

அவர் நினைவில், சுதந்திர இந்தியா வறுமையை ஒழிக்கப் பாடுபட்டு, ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து முன்னேற்றப் பாதையில் நடை போடத் துவங்கியது!

No comments: