Sunday 26 October, 2008

தீபாவளி நாளில்....

என் சின்னவயசிலே, எல்லா வகையிலும் மகிழ்ச்சி!

புத்தாடைகள்! மத்தாப்பு பட்டாசுகள்!

முறுக்கு, இனிப்புகள்! படிக்க தீபாவளி புத்தகங்கள்!

இன்னும் என்ன வேண்டும்!

இந்த மகிழ்ச்சிக்குப் பின்னே...

அப்பா துணிக்கடைக்கு எங்களை அழைத்துப் போவார்!

சீட்டித் துணி வகைகளிலும், பசங்களுக்கான டிராயர், சட்டை வகைகளிலும் நாலு வகைகளைக் கடைக்காரர் எடுத்து போடுவார்!

மகிழ்ச்சியாய் அதற்குள் ஒரு கலரைச் சுட்டிக் காட்டுவோம்!

புதுத் துணி மணம்! பட்டாசுப் புகையோடு, பட்சண மணமும் சேர்ந்து மகிழ்ச்சியில் மனம் திளைக்கும்!

அது ஒரு பொற்காலம்!


(அப்பா கடன் சொல்லி, துணிகள், மத்தாப்புகள் வாங்கி கொடுத்த விஷயம் எங்களுக்குத் தெரிவிக்கப் படாத விஷயம்)

No comments: