Thursday 16 October, 2008

சின்ன விஷயங்கள்...

.
பெண் குழந்தைகளுக்கு தலை பின்னி, பின்னல் முடிவில் ரிப்பன் வைத்து பட்டாம்பூச்சி போல் முடி போடுவது அழகாக இருக்கும்!

ரிப்பனில் எத்தனை விதம்! சாட்டின் ரிப்பன், பவானி ரிப்பன், சில்க் ரிப்பன் என பல வண்ணங்களில் இருக்கும்!

கோடுகள், புள்ளிகள், பூக்கள் என வகை வகையாய் கிடைக்கும்!

உல்லன் நூல்களில், ரோஸ், பச்சை, நீலம், வைலெட் என தனியாகவும், அத்தனைக் கலரும் ஒரே உல்லனில் இருக்கும்படி அமைந்தும் இருக்கும்.

இந்த உல்லன் நூலை வைத்து அழகாக சிறுமிகளுக்கும், குழந்தைகளுக்கும் பின்னலிடுவர்.

குஞ்சம் வைத்துப் பின்னலிடுவதும் ஒரு அழகுதான்!

இன்று நாட்டியம் ஆடும் பெண்கள் குஞ்சம் வைத்துக் கொள்கின்றனர்!

அரிதாய் மணப் பெண்கள் வைத்துக் கொள்கின்றனர் !

நெற்றிப் பொட்டு !

அந்த நாட்களில், நெற்றிக்கு கருப்பு சாந்து இட்டுக் கொள்வது பெண்களின் வழக்கம்!

அரிசியைக் கருக்கிக் கூழாக்கிக் காய்ச்சி, கொட்டாங்கச்சியில்
ஊற்றி வைத்து வெய்யிலில் ,உலர்ந்தபின், நெற்றியில் இட்டுக் கொள்வர்.

பெண்ணுக்கு சீராக வெள்ளிக் கொட்டாங்கச்சி கொடுப்பதுண்டு!

அழகழகான வடிவங்களில், கண் மைக் கூடுகள் இருக்கும்!

வீனை, மயில்,அன்னம், இன்னும் வித விதமாய்....!

பின்னால் மை அச்சுக் குச்சிகள் வந்தன!

சிவப்பு சாந்து, சின்ன பாட்டில்களில் வந்தன!

அதில் வாசனைக் கலந்து...!

அப்புறம்...ஸ்டிக்கர் பொட்டு, அதில் தான் எத்தனை வடிவங்கள்! வண்ணங்கள்!

இப்பொழுது, கற்கள் பதித்த சம்கிவேலைப் பாடு கொண்ட பொட்டுகள்!

நுட்பமான வேலைப்பாடு கண்ணுக்குத் தெரியாத வகையில் மிகச் சிறிய பொட்டுகள்!

தொடரும்...

1 comment:

Uma said...
This comment has been removed by the author.