Tuesday 21 October, 2008

சின்ன விஷயங்கள்!

.
அப்போதெல்லாம், நிறையத் துணிகளைத் துவைத்து உலர்த்த, சாதாரண சோப்புக் கட்டிகள்தான் கிடைக்கும்.

நாம் புழங்கும் தண்ணீரும் உப்பாக இருந்தால்... சோப்பை உராய்ந்து கை வலிக்கத் துவைக்கணும்!

பிறகு 'சன்லைட்' சோப் வந்தது! துவைக்கும் வேலை சுலபமாயிற்று!
தேகடை சோப்பையும் கல்லில் தேய்த்து, துணிகளை துவைப்போம்.

( தீர்ந்து போகும் நிலையில் உள்ள சோப்=தேய் கடை சோப் என்று சொல்லலாமா ? )

501பார் சோப், வீல் பார் சோப், டெட் சோப், ரின் சோப் (வாசனையாய் இருக்கும்!)

அதற்குப் பின்பு, சோப்பு தூள்கள் (சோப்புக் கட்டிகளை வெட்டும்போது கிடைக்கும் தூள்கள் ) பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வந்தன!

கொஞ்சம் வெந்நீரில் தூளைப் போட்டு கைகளால் நன்கு கலக்கி, துணிகளை போட்டு சிறிது நேரம் ஊற வைத்த பின் துவைத்தால் துணிகள் சுத்தமாக இருக்கும்!

நிர்மா, சர்ப்ஃ தூள், இவைகளுக்குப் பின், சுர்ப்ஃ எக்ஸெல் இப்போது வந்தது!

இன்னும் இன்றைய நாகரீகத்தில் லிக்விட்டாகக் கிடைக்கிறது! இயந்திரம் தோய்க்கிறது! உலர்த்துகிறது! வேகமான உலகத்தில், என்ன என்ன வசதிகள்!

இப்படியே அனைத்து வீட்டு வேலைகளுக்கும் நவீன வசதிகள் இருக்கின்றன!

இப்போது, வேண்டியதெல்லாம் அன்பு! அன்பு!! அன்பு!!!

தாயும்-பிள்ளையும்
தந்தையும்--மகனும்
கணவனும்--மனைவியும்
சகோதர--ஸகோதரி

அடிப்படைக்கு பஞ்சம் வரக் கூடாதே!

இறைவா! மனிதத்தை அன்பில் வாழ வை!

No comments: