Tuesday 1 December, 2009

வீடு ! - 4

புழக்கடை ரேழியைக் கடந்து சின்ன தாழ்வாரம் அதையொட்டி 'வெந்நீர் உள்'.

அப்புறம், புழக்கடையில் மேற்கால ஒரு சேந்து கிணறு!

எங்க சித்தப்பா, பெரியப்பா வீடும் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும்.

புழக்கடை கிணற்றை எல்லோரும் உபயோகிப்போம்!

தெற்கு மூலையிலே அந்தக்கால கழிப்பறை! மேற்கூரை கிடையாது! வெட்ட வெளியா இருக்கும்!

இப்போ வீட்டுக்குள்ள வருவோம்!

கூடத்தைத் தொட்டாற்போல ஒருபுறம் சமையல்'உள்'

இன்னொருபுறம் 'கண்ணன் உள்'!என் தம்பியின் அறை!

சின்னவயசில, காய்ச்சல் வந்து கால்கள் நடக்க முடியாமே முடக்கி விட்டது. கையும் ஓரளவு இயங்கும்!

அவன் அந்த உள்ளில் தான் படிப்பு, தியானம் எல்லாம்! அவன் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பக்தனாக இருந்தான்!

இந்த வீட்டில்தான் பகவான் அடி அடைந்தான்!

பிறகு,வாசல் ரேழியை ஒட்டி,'படுக்கும் உள்'

அந்த உள்ளில் ஒரு அட்டாணி(பரண்) இருக்கும்.

அந்த அறையை பலகை மச்சு உள்'ளுன்னு சொல்வார்கள். குளிருக்கு அடக்கமாக இருக்கும்.

புழக்கடை நிலம் விற்கப்பட்டது! வீட்டின் இடதுபக்கத்து நிலம் விற்கப்பட்டது! இரண்டு சகோதரிகள் திருமணங்கள் நடந்தன!

வீட்டின் பழுதை சரி பார்க்கமுடியா சூழ்நிலை!

தருமபுரிக்கு மாற்றல் வந்தது!

என் பெற்றோருடனும், என் பெண்ணுடனும், தருமபுரி வந்து சேர்ந்தேன்.

மின் அலுவலர் வேலை(எழுத்தர்)

சின்ன மகன் கோவையில் டாக்டருக்கு படித்தான்.

பெரிய மகன் டெல்லியில் எஞ்சினீயரா வேலைப் பார்த்து வந்தான். தம்பியை, எங்களை கவனிச்சுக்கிட்டான்.

அப்பாக்கு வீட்டை விட்டு வந்தது பிடிக்கவில்லை!

கொஞ்ச நாளில் அப்பாவும் இறந்தார். அம்மாவும் சிலவருடங்களில் இரண்டாவது அண்ணன் விட்டில், பாரிஸ வாதத்தால் இறந்து போனார்.

வீடு விற்கப் பட்டது! அது தரைமட்டம் ஆக்கப் பட்டது!

உயிரோட்டமுள்ள வீடும் ஒரு நாள் இல்லாமல் தான் போகும்!


எங்கள் மனசில் என்றும் குடியிருக்கும் வீடே! உன்னை மறக்க முடியுமோ?

எங்கள் வாழ்க்கைக்கு சாட்சியாய் இருந்தாய்! ஆதாரமாக இருந்தாய்! உன்னை என் உயிருள்ள வரையும் நினைத்திருப்பேன்!

முடிந்தது...

No comments: