Monday 14 December, 2009

எப்படியெல்லாம் எழுதினோம்...!

சிறிய வயதில், எப்படி எழுதக் கற்றோம்?

முதலில் கையில் கிடைத்தப் பென்ஸில், சாக்பீஸ் இவற்றால் சுவரெல்லாம் கிறுக்கி, கையில் கிடைத்தப் பேப்பரில் கிறுக்கி மகிழ்ந்தோம்!

பள்ளியில் வாத்தியார் பிள்ளைகள் கைப் பிடித்து, விரலால் மணலில்,'' நா ''வன்னா எல்லாம் எழுதக் கற்றுத் தந்தார்!

பின்பு, சிலேட்டில் (பலகையில்) எழுதினோம். அப்போ ஒண்ணாப்பு, ரெண்டாப்பு வந்திருப்போம்!

பென்ஸிலில் (பலப்பம்) பலவகைகள் இருக்கும்! கல் பென்சில், மாப்பென்சில், கலர் கலரான மாப்பென்சில் ...இப்படி...

சாதாப் பென்சில் சிலசமயம் சிலேட்டில் கீறல் செய்யும். ஆனால், கல் பென்சில் அப்படியே 'அச்சுக் கொட்டும்!

மேல்வகுப்பு வந்தால், காகிதப் பென்சிலில் நோட்டுப்புத்தகத்தில் எழுத வேண்டும். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்!

அப்புறம் பேனாவில், இன்க்(மை) தொட்டு எழுதும்பேனா! பிறகுதான் 'ஊற்றுப் பேனா'வில் எழுதும்பழக்கம் வந்தது!

இன்னும் எளிதாக 'ஜெல்' வகையறாப் பேனாக்களும் பவனி வந்து எழுதும் ஆசையைத் தூண்டுகின்றன!

இன்று...எங்கேயோ போய்விட்டோம்!!!

கணினி பொத்தானைத் தட்டிவிட்டால் 'அச்சு அச்சாக' எழுத்துகள் பூவாய்க் கொட்டுகின்றனவே! மை இல்லை! பேனா இல்லை! தாள் இல்லை!

விந்தையிதை என்னென்போம்?

கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்வோம்!

No comments: