Sunday 6 December, 2009

அதிர்ச்சி வைத்தியம்!

தினம் விளையாட வரும் பத்மாவை இப்போதெல்லாம் காணோமே?

பத்மாவும்,சுந்தரியும் விளையாட்டுத் தோழிகள்!

பத்மாவுக்கு எட்டு வயசு இருக்கும்! சுந்தரிக்கு ஆறு வயசு இருக்கும்!

வீட்டில் அம்மாவைக் கேட்டால் 'அவளுக்கு அம்மை போட்டிருக்கு! அவ வீட்டு வாசலில்
வேப்பிலைச் செருகியிருக்கு பாரு!' அப்படீங்கறா!

ஒரு நாள்,சுந்தரி, மெதுவா பத்மா வீட்டுக்குப் போனாள்!

உள்ளே அந்த அறையின் ஜன்னல் வழியாப் பாத்தக் காட்சி!

ஒரே ஓட்டம்!

சுந்தரி, வீடு வந்துதான் மூச்சு விட்டாள்!

வாழை இலையில்...கருப்பா, துரும்பா இளைச்சு ஒரு உருவம் கிடந்தது! பெரியம்மை(வைசூரி) (1940 களின் இறுதிகளில் என்று நினைவு!)

பத்மாவின் அம்மா, மாரியம்மன் கோவிலுக்குச் சென்று, தினமும் குளித்து விட்டு, மாரியம்மன் சந்நிதியின் முன்னே வேண்டி கொண்டு, எதிரிலிருக்கும் கம்பத்தின் மீது நீர் ஊற்றுவார்!

இன்னும் என்னென்ன வேண்டுதல் உண்டோ எல்லாம் பக்தி,சிரத்தையோடு செய்து வந்தார்!

மாரியம்மா கண்ணு தொறந்துட்டா! பத்மா சிறிது சிறிதா குணமடைஞ்சா!

நல்ல காலம்! கண்கள் பாதிக்கலை!

கால ஓட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமா குணமாகி வந்தா!

உடம்பெல்லாம் இன்னும் தழும்பு நிறம் மாறவில்லை!

பத்மா வெளியிலே வளைய வர ஆரம்பிச்சுட்டா!

பத்மா வரான்னு சொன்னாப் போதும் சுந்தரி சமையல் அறைக் கதவுக்குப் பின்னால்,கண்ணை இருக்க மூடிக் கொண்டு கத்துவாள்!

பத்மாவும் ஏமாற்றத்தோடு போய் விடுவாள்!

சுந்தரியிடம் 'பத்மா வரா!' என்று சொன்னாலே போதும்! பயத்தோடு கண்ணைப் பொத்திகொண்டுக் கத்துவா!

ஒருநாள்! ஞாயிற்றுக் கிழமை! விடுமுறை தினம்!

சுந்தரியும், அவள் தோழிகளுடன், தன் வீட்டில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்!

அப்போது சுந்தரி வேகமா ஓடி வந்துகொண்டிருந்தா! எதிரில் யார்மீதோ மோதிக் கொண்டு,
இரண்டு பேரும் கீழே விழுந்தார்கள்!

வலியுடன்,தலையைத் தடவி கொண்டே...நிமிர்ந்துப்...பார்த்தாள்....

பார்த்தவுடன் சிரிப்பு...சிரிப்பு!....

பத்மாவைப் பக்கத்திலே பார்த்ததும் பயம் விலகிவிட்டது!

பத்மாவும் இப்போ நிறைய குணமாகிவிட்டாள்! தழும்புகள் இருக்கு!

எதிர்பாராதத் திடீர் சந்திப்பு சுந்தரியின் பயத்தைப் போக்கிவிட்டது!

நல்ல அதிர்ச்சி வைத்தியம்!

No comments: