Friday 4 December, 2009

கண்ணன் என் தம்பி! - 2

பெற்றோர் கண்ணனுக்கு வைத்த பெயர் சிவாம்ருதம்.

அப்பா அப்படித்தான் கூப்பிடுவார்!

பள்ளியில் கொடுத்த பெயர் சிவாம்ருதம்.

நாங்கள்தான் கண்ணா! கண்ணா! என்று கூப்பிடுவோம்!

நிறைய புத்தகங்கள் மூலமாக, விவேகானந்தரையும், ராமகிருஷ்ண பரமஹம்ஸரையும் அறிந்து கொள்ள முயன்றான்.

ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் (குரு பாயிக்கள்) துரியானந்தர், லாடு போன்றோர் வரலாற்றையும் படித்தான்.

"காஸ்பெல் ஆப் ராமகிருஷ்ணா" புத்தகம் படிக்க ரொம்ப விரும்பினான்.

அவன் ஆர்வம் பலித்தது! விலைக்கு வாங்கப் பட்டது!

ராமாயணப் பலகையில் வைத்து படித்து வந்தான்.

ஆன்மீக விஷயமாக வரும் சந்தேகங்களை, பேலுர் மடத் துறவிகள், அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மடத் துறவிகளிடம் கடிதம் எழுதித் தெளிவித்துக் கொள்வான்.

தபாலுக்காகக் காத்திருப்பதில் ஒரு மகிழ்ச்சி அடைவான்!

வீட்டில் ராமகிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி போன்ற சஞ்சிகைகள் தருவிக்கப் பட்டன.

சேலம் மடத்துடன், கடிதப் போக்குவரவு வைத்திருந்தான்.

"சகோதரி நிவேதிதா" மீது பாடல் எழுதி கல்கிக்கு அனுப்பினான்.

அது வெளிவந்தது! 30, அல்லது 50 ரூபாய் கிடைத்தது !

ராமகிருஷ்ணரின் உருவப் படத்திற்கு, எவர்சில்வர் பிரேம் போட்டு வைத்துக் கொண்டான்!

திரு.ரா.கணபதி அவர்கள் "அறிவுக்கனலே! அருட்புனலே!"

முதல் பதிப்பு -வருடம் 1965. விலை -ரூ.12. கலைமகள் காரியாலயம்.

ராஷ்ட்டிரபதி எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டு கௌரவித்தது.


மேற்சொல்லப்பட்ட புத்தகத்தை, திரு.ரா.கணபதி அவர்கள் தம் கைப்பட சிவாம்ருதத்தின் நலம் விழைந்து,

"குருமஹராஜின் கிருபையால் ச்ரி. சிவாம்ருதத்திற்கு ஆன்ம நலன், உடல் நலன் இரண்டும் கிட்ட வேண்டுமென்ற பிரார்த்தனையுடன்,

ரா.கணபதி."

என்று எழுதி புத்தகத்தை அளித்துள்ளார்.


பகவான் ராமகிருஷ்ணர், சாரதாமணி தேவி, விவேகானந்தர் இவர்களின் பிறந்த தினம் அன்று, துதிப்பாடலுடன், இனிப்பு (தேங்காய் பர்பி) செய்து வணங்குவோம்!

தமிழில் கவிதைகள், கீர்த்தனைகள் இயற்றினான்.

அவனுக்கு எழுத முடியாத போது நாங்களும் உதவியாக எழுதுவோம்

சம்ஸ்க்ருதமும் அவனாகக் கற்றுக் கொண்டு "பகவத் கீதை" படிக்கலானான்.

சேலம் ராமகிருஷ்ணா மடம் சென்று பார்க்க ஆசைப் பட்டான்.

இன்னும் வரும்....

No comments: