மரங்கள் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கின்றன என நாம் அறிவோம்.
இன்று நாடு முழுதும் பசுமை சூழலை வளர்க்க வேண்டும் என பெரிதளவு பேசப் படுகிறது.
செயல் படவும் செய்கிறது.
நான் கொஞ்சநாள் முன்பு, பொதிகையில் மரச்சாமான்கள் பற்றி சுவாரஸ்யமான செய்திகள் கேட்டேன்.
பர்மா தேக்கு, ஈட்டி (ரோஸ்வுட்), கருங்காலி மரம் போன்ற மர வகைகளைப் பற்றியும், அவற்றில் செய்யப்பட்ட சாமான்கள் (ஃபர்னிசசர்) பற்றியும் அவற்றின் தன்மையைப் பற்றியும் விவரமாகச் சொன்னார்.
நினைவில் இருக்கும் சில செய்திகளை நினைவு படுத்திக் கொள்கிறேன்.
வாசல் நிலைப்படி ஈட்டி மரத்தில்தான் செய்வார்கள். லக்ஷ்மி வாசம் செய்கிறாள்.
கருங்காலிமரம் இல்லாத வீடே கிடையாது.
கருங்காலி மரம் என்று தெரிஞ்சு கொள்ளாமலேயே உபயோகிக்கிறோம்.
உலக்கை, உரல், வாயோடு (குந்தாணி), போன்ற சாதனங்களை முக்கியமாக பயன் படுத்துகிறோம்.
கோவில் கோபுரக் கலசத்துக்கு அடியில் தாங்குவது கருங்காலி மரம்தான்.
இடியை, வெய்யிலைத் தாங்கும் சக்தி இந்த மரத்துக்கு உண்டு.
கருங்காலி மரம் இயற்கையாகவே தன்னைக் காத்துக் கொள்ளும்.
கரையான், பூச்சிகளால் அழிக்க முடியாதது.
கருங்காலி மரம் இப்போது விளைவது இல்லை. இந்த மர வகை மிகவும் கனமாக இருக்கும். கீழே போட்டால் உடைந்து விடும் தன்மையை உடையது.
ஈட்டி மரங்கள் ஊஞ்சல் போன்றவை செய்யப் படுகின்றன.
ஊஞ்சல் ஏழு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்டவையாக ஒரே பலகையில் செய்யப் பட்டிருக்கவேண்டும் என்றால் அந்த மரத்தின் செழிப்பை வியக்கத்தான் வேண்டும்!
திருமண மக்கள் அமரும் பலகை, ஊஞ்சல் போன்றவை ஒரே பலகையால்தான் செய்திருக்க வேண்டும்.
விசேஷங்கள் போன்றவைகளுக்கு இரண்டு பலகையை இணைத்துச் செய்திருக்கக் கூடாது.
மர ஆப்பு என்றால், இரண்டு கைவிரல்களை இணைப்பது போன்ற முறையிலும் பலகைகளை இணைப்பார்கள்.
அந்தக்கால தூண்களில் உள்ள, நுண்ணிய சித்திர வேலைப் பாடுகள் இன்று எவ்வளவு முயன்றும், பழைய வேலைப்பாடுகளைக் கொண்டுவர முடியவில்லை.
இவற்றைக் கண்டு ஜப்பான் போன்ற வெளிநாட்டவரும் வியக்கின்றனர்.
பழங்கால மர வேலைப்பாடுள்ள பொருள்களை நம் சொத்தாகப் பாதுகாக்க வேண்டும்.
Thursday 6 November, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment