Monday 24 November, 2008

Boost is the Secret of My சமையல் !

காவேரி கரை வாசம் விட்டு.. கூவம் வாசத்திற்கு பழக ஆரம்பிச்ச நாட்கள்..

எல்லாம் புதுசு.. வீடு புதுசு.. school புதுசு.. teacher புதுசு..

எல்லாத்தையும் விட.. தனிமை புதுசு..

school விட்டு வந்தா.. பூட்டு தான் வரவேற்கும்..

அம்மா அப்பா.. வேலைக்கு பார்த்துகொண்டு இருந்ததால்..

அம்மா..பாவம்..

காலையிலே evening tiffin முதற்கொண்டு டப்பால போட்டு வெச்சுட்டு போய்டுவா..

சாயந்தரம் school விட்டு வந்ததும் .. ஆறிப்போன இட்லியும், துவண்டு போன தோசையும்.. என்னை பார்த்து.. ஐயோ பாவம்னு சொல்லும்..

house owner aunty தான் என்னோட care taker ..

ரொம்ப அன்பானவள்..

இப்படி நாட்கள் வீட்டுகார அம்மாகாரு..(தெலுங்கு மாமி.. அதான் அப்படி சொன்னென்)புண்ணியத்தில..ஒட....

ஒரு நாள்..எங்க அம்மாகிட்டெ.. "நாளைலேர்ந்து உங்க பொண்ணுக்கு நானே boost கல்ந்து தரேன்னு அறிக்கை விட்டா..

அன்னிக்கு அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம்..

"எத்தனை நல்ல மனுஷி .. இருந்தா மாமி மாதிரி இருக்கணும்னு.".

அங்கே இருந்த ஒன்பது குடித்தன காரர்களும்.. புகழ் மாலை போட..

அடுத்த நாள் நானும்.. ஆவலாய்.. school விட்டதும்.. boost தேடி ஓட..

மூலையிலே பத்திரமா மூடி வெச்ச tumbler காண்பிச்சா.. சுந்தரத் தெலுங்காள்.

குடிக்க ஆரம்பிச்சேன்..

முதல்ல.. பால் மட்டும் வந்தது..

(அம்மா.. boost bottle குடுக்க மறந்து போய்ட்ட போல இருக்குனு நினச்சேன்)

ஒரு ரெண்டு முழுங்கு குடிச்சு முடிச்சதும்.. ஏதோ கட்டி வந்து தொண்டையை அடச்சது..chocolate வாசத்துடன்..

பாலோட சேராத அந்த boost ஐ கற கறனு தின்னு முடிச்சு, பேந்த பேந்த விழிச்ச வேளையில்...

அடுத்து ஒரு கற முற item tumbler அடியிலேர்ந்து வந்தது..

அது வேற ஒன்னுமில்ல..சக்கரை தான்.

இப்படி தோண்டத் தோண்ட பிச்சைகாரன் பாத்திரம் போல..

ஒன்னோடு ஒண்ணு ஒட்டாமல்.. ஒவ்வொன்றாய் என் வயிற்றில் இறங்க..

ஐயோ.. பட்ட பாடு.. அய்யா சாமி..

இன்னி வரைக்கும் நெஞ்சை விட்டு அகலாத ஒரு சுவை

இப்படியொரு பானகம் இது வரை யாருமே குடிச்சு இருக்க முடியாது..

இப்படி boost ஆசை புஸ்வாணமாய் போச்சு..

ஆனா மாமி கிட்டே ரொம்ப super ஆ இருந்ததுனு சொல்லிட்டென்..

அம்மா வந்ததும் சொன்னென்..நான் பட்ட கஷ்டத்தை .....

"உனக்கு நாக்கு ரொம்ப நீளம் "னு சொல்லி topic full stop வெச்சுட்டா..

இது ஒரு தொடர் கதையா போச்சு..

ஆனா..இந்த boost சகாப்தம் தான் என்னை சமையல் கட்டுக்குள் சீக்கிரம் நுழைய வைத்தது..

பங்காரு அம்மா எனக்கு ஒரு வழிகாட்டி..

எப்படினா..எங்கிருந்தோ வந்த எனக்கு அன்பு காட்டின பெருந்தன்மை....

தனக்கு நன்னா செய்ய தெரியாட்டியும்.. நல்லது செய்யனும் என்கிற மனசு..

(boost போட தெரியாட்டியும்.. school விட்டு வரும் குழந்தையின் தாகம் தீர்க்கும் அந்த எண்ணம்)

ஆனா நான் கத்து கொண்ட பாடமே வேற......என்ன தெரியுமா???

'நல்லது செய்யனும்னு நினச்சா....அதை நன்றாக செய்.."

"மற்றவர்களுக்காக ஒண்ணு செய்யும்போது நீ செய்த வேலை உனக்கு முதலில் திருப்தி தரதானு உன்னையே ஒரு தரம் கேட்டுப் பார்"..

சரியா நான் சொல்றது ?

அன்புடன்
அகிலா

1 comment:

Thangamani said...

அன்பு அகிலா!
நகைச்சுவை உனக்குக் கைவந்த கலை!
அப்படியே உன் சிறுவயதின் நினைவைப் பகிர்ந்திடும்
அழகுக்கென் பாராட்டுகள்!

அன்புடன்,
தங்கமணி.