Friday 28 November, 2008

குடையால் வந்த குடைச்சல்..!

அது ஒரு மழைக் காலம்..

மெட்ராஸ் .. இப்போதைய சிங்கார chennai..

ஒரு கொட்டும் மழை காலை..

கரண்ட் இல்லாததால்.. transister ம் காதுமா எல்லாரும் வானிலை அறிக்கை கேட்டுண்டு leave announcement வராதானு ஏங்க..

மழையினால் மனமிரங்கா மாநில அரசு மெளனம் சாதிக்க..

எல்லாரும் அவரவர் தொழிலை அடாது மழையிலும் விடாது கவனிக்க வேண்டிய கட்டாயம்..

நமக்கு மழையில் school போறதுனா ஒரு தனி குஷி தான்..

almirahல அழகாய் மடிச்சிருந்த raincoat .."எனக்கும் மழையில் நனைய ஒரு chance கொடேன்" னு என்னை பார்த்து ஏக்கமாய் பார்க்க ..

நானோ .நேற்று பெய்த மழையில் முளைத்த..

பூ போட்ட குடையை எடுத்துண்டு விட்டேன் ஜீட் ஸ்கூலுக்கு..

என் சித்தி ஆசையாய் வாங்கின குடை என்பதால்.. பய பக்தியோட .. ஒதுக்குபுறமா ஒரு இடத்தில் விரித்து விட்டு.. ஓடினேன்.. classroom..

சாயந்திரம் school பெல் அடிச்சதும் தேடினேன்.. தேடினேன்.. என் புது குடையை..கிடைச்சாதானே..

"போனால் போகட்டும் போடா" னு மனசை தேத்தினாலும் ..

வீடு வர வர.. வயிற்றில் ஒரே புளி கரைப்பு தான்..

நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் ..குடை பற்றி புலன் விசாரணை பண்ண..

என் சித்தி ஸ்கூல் வந்து டீச்சரை சந்திக்க ஒரு மனதா முடிவானது..

அடுத்த நாள்.. கடங்காரன் ஒண்ணாம் தேதி ஆபிஸ் வாசலில் நிக்கிற மாதிரி..

சித்தி ஆஜர்..classroom வாசலில்..

"class teacher தேடி நான் ஓட....

corridor ல் என் teacher வர..

என் சித்தி .. "ஷீலா எப்படிடி இருக்கே"னு கேட்க..(ஷீலா.. என் teacher பேரு)

பிரிந்த நண்பிகள் ஒன்று கூடிய அந்த நேரம்..

கும்மி அடிக்க ஆரம்பித்ததில் .. என் சித்தி குடை பற்றி மறக்க..நமக்கு ஒரே கொண்டாட்டம்தான்..

எங்க சித்தி ஒரு over enthusiasm ல "ஷீலா..sunday வீட்டுக்கு வாயேன்"னு address கொடுக்க..

என் நண்பிகள் எல்லாம் என்னை பொறாமைல பார்க்க..

அந்த sundayம் வந்தது..

calling bell அடிக்க ..கதவின் பின்னே.. class teacher..

வீட்டில ஒரே உபசாரம்..

ஆனா.. "sunday வரும் பின்னே.. ஷிலா வருவாள் முன்னேனு" டீச்சர் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஆஜர் ஆக..

"அந்த நடுங்கும் ஞாயிறுகள்"னு டப்பிங் படமே எடுத்துடலாம்..

எத்தனை சுதந்திரம் இழந்த Sundays..(டீச்சர் கிட்டே நல்ல பேர் வாங்கணுமேனு தான்!!!!!!!)

இப்படியாக..குடை பிடிக்க குடைச்சல் வந்த காலமது..

ஆனா.. அந்த டீச்சரை இன்னும் மறக்காம இருக்க காரணம் ஒண்ணு உண்டு..

அதை தெரிஞ்சிக்கணுமா..?

கொஞ்சம் wait பண்ணுங்கோ..
.

அன்புடன்
அகிலா

2 comments:

அன்புடன் அருணா said...

நல்லாருந்தது மழைக் கால மலரும் நினைவுகள்....sorry குடைக் கால மலரும் நினைவுகள்....
அன்புடன் அருணா

Akila said...

thanx for your wonderful comment aruna..