"நான் அனுப்புவது கடிதம் அல்ல! உள்ளம்!" என்று கவிஞர் கூறுவது உண்மையே!
இளம் தம்பதியரும்,பெற்றோர் பிள்ளைகளும் பிரிந்து வாழும்போது பாலமாக அவர்களின் உணர்வுகளை இணைப்பது கடிதம்தானே?
கடிதங்களைக் கொணர்ந்து கொடுக்கும் தபால் ஊழியர் இவர்களுக்குத் தெய்வமாகத் தோன்றுவது வியப்பில்லையன்றோ?
தபால் ஊழியர் தொழில் உன்னதமான சேவையாகும்.
அவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் மக்களுடன் உறவாக வாழ்வதே சிறப்பாகும்.
வெய்யிலில் அலைந்து, கிராமங்களில் மக்களுக்கு மணியார்டர் மூலம் பணம் பட்டுவாடா செய்தல், கடிதங்களை கொடுப்பதுடன், படித்து விளக்கம் சொல்லுதல் போன்ற உதவிகளையும் செய்வர்.
சிலர், தபாலூழியரை மோர், தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் பண்புடையவராக இருப்பர்.
கார்டு, கவர், இன்லன்ட் லெட்டர், ஏர்மெயில் போன்றவைகள் கடிதம் எழுத உபயோகத்தில் இருந்தன.
"தந்தி" என்பது சாவு போன்ற செய்திகளுக்கென்று நினைத்து பயப்படும் மக்கள் உண்டு.
திருமண வாழ்த்துப் போன்றவற்றிற்கும் "தந்தி" உபயோகத்தில் இருந்தது.
எங்கள் கிராமத்தில் காலை எட்டு மணிக்கு தபால் அலுவலகம் முன்பு மக்கள் கூடி அங்கேயே தபாலைப் பெற்றுச் செல்வதுமுண்டு.
வேலை கிடைக்க, காலேஜ் ஸீட் கிடைக்க, பிள்ளையிடமிருந்து (மணியார்டர் கிடைக்க, பணமோ, அவன் வரவைக் குறித்தோ, கணவனிடமிருந்து கடிதம் பெற என்று பலப்பல எதிர்பார்ப்பில், தபால்காரர் பணி முக்கியம் வாய்ந்தது.
கடிதம் எழுதத் தெரியாதத் தாய்மார்களுக்கு, அவர்கள் சொல்லுவது போலவே எழுதி உதவி செய்யணும்.
பேச்சுவழக்கில் மண் மணம் கமழ எதிரிலே இருப்பது போல் சொல்லுவார்கள்.
அதே கருத்தை அப்படியே கடிதத்தில் கொணர்ந்து நாம் எழுதுவதோடு மட்டுமல்ல!
படித்தும் காட்ட வேண்டும்.
(தொடரும்...)
அன்புடன்,
தங்கமணி.
Tuesday 11 November, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment