Sunday 16 November, 2008

நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு !

அப்படி என்னை தூக்கிவாரி போட வெச்ச விஷயம்..

ஜாதகத்தில இருக்கிற கோடு கட்டம் ரொம்ப பொருந்தினது..

(10 வருஷத்துக்கபறம் தான் உண்மை தெரிஞ்சது ஒரு பெரிய ஜோசியர் மூலமா.. இது பொருந்தியே இருக்க முடியாத ஜாதகம்னு... இதுதான் ஜோசியம் என்பதா..?????)

ஜாகை, job எல்லாம்.. அப்பாக்கு ok..

ஆனா.. என்னை மிரள வெச்ச அந்த எழுத்துக்கள் இன்னமும் என் கண் முன்னே நிக்கறது..

அது என்னனா.. Tom and jerry ல கூட என்னிக்காவது ஒரு நாள் jerry மாட்டிக்கும்..

ஆனா .. நான் துரத்தி துரத்தி கத்துக்க நினச்சு என்னை விட்டு olympic தங்க பதக்கம் வாங்கற speed ல ஓடி போன.. சங்கீதம் ...

பையனோட interests என்கிற இடத்தில.. கொட்டை எழுத்தில் "LOVES MUSIC" நு கிண்டலா என்னை பார்த்து கண் சிமிட்டியது..

அட பாவமே..என்ன கொடுமை sir இது..

"அப்பா.. அந்த பையன் பாவம் பா.. என்ன மாதிரி ஒரு ஞான சூன்யத்தோட என்ன பண்ணுவார்னு கேட்டேன்.."

'கல்யாணம் சொர்க்கத்தில நிச்சயக்கபடறது .. சங்கீதத்தில இல்ல".. நு என்னை சமாளிச்சு-fy பண்ணிட்டார்.'.அப்பா..

அவரோட வார்த்தைகள் 100% right....

மனசு ஒத்துபோனா போதும்..

காடு மலை நு நாங்க எங்க சுத்தினாலும்..

(நான் எத்தனை) சண்டைகள் போட்டாலும்..

சோதனைகள் தாங்கி.. சாதிக்க நினைக்கும் நாங்க என்னிக்குமே..

Made For Each Other Couple தான்..

"சொர்க்கமே என்றாலும் நம்ம சென்னை போல வருமா.." நு பாடின காலம் போய்..

இப்போ (இமய) "மலையோரம் வீசும் காத்து" நு பாடிண்டு ..

குழந்தைகள் என்னும் வட்டத்துக்குள் சுத்தி சுத்தி வந்தாலும்..

ரொம்ப miss பண்ற விஷயம் ஒண்ணு உண்டு..

சொல்றேனே.. அதை அடுத்த post ல..

அகிலா

1 comment:

Thangamani said...

அன்புள்ள அகிலா!
அஸ்திவாரம் பலமா இருக்கு!
இன்னும் என்னென்ன சொல்லப் பொகிறாய்!
அருமை!

அன்புடன்,
தங்கமணி.