Wednesday 19 November, 2008

நினைவோ ஒரு பறவை !

கொஞ்சம் rewind பண்ணி ஒரு 35 வருஷம் பின்னாடி போகலாமா..

காலை மணி 5:55..

vanthe maatharam..sujalaam.. sufalaam.. All India Radio la முழங்கற நேரம்..

தூங்கி கொண்டிருக்கும் எங்கள் படுக்கைகள் ஒவ்வொன்னா தாத்தா.. உருவும் நேரம்..

தரையில தடுமாறி தவக்களை போட்டு படுத்து..தோல்வியை தழுவி.. .

பாட்டி oho productions ல wholesaleல கலந்த காபி ஆறிடுமேனு..

அரக்க பரக்க அரைகுறையா பல் தேச்சுட்டு..

அந்த வீட்டில கறந்த பசும்பால்ல கலந்த filter காபியை "பேஷ் பேஷ் ரொம்ம்ப நன்னா இருக்குன்னு".. உசிலமணி styleல.. ஒரு இழு இழுக்கிற சொகம் இருக்கே..

ஆஹா.. தேவாமிர்தம்தான்..

இப்படியாக queue நின்னு(வீட்டில டிக்கெட் ஜாஸ்தி ஆச்சே)காலை கடனும், குளியலும் முடிச்சு.. ready ஆனா..

cycle rickshaw ஓட்டி ஓட்டி 'S' காலோட பெருமாள் ரிக்க்ஷாகாரர் புகையில, பொட்டு, செக்கசிவக்க பற்பசை விளம்பரத்துக்கு pose கொடுத்துண்டு நிப்பார்..

school, பாடம், படிப்பு நு இருந்தாலும்..பண்டிகை வந்தால் கொண்டாட்டம் தான்..

தீபாவளிக்கு பட்டாசு list போட்டு.. அதை வாங்கி காய வெச்சு.. பத்திரமா எடுத்து வெச்சு...

daily அத ஒரு தடவ.. கண்ணால பார்த்து சந்தோஷப்பட்டு தீபாவளிக்கு

காலம்பர சீக்கிரம் எழுந்து ஊருக்கு முன்னாடி வெடிக்கிற குஷியே தனி தான்..

அடுத்து இந்த பொங்கல் வரும் பாருங்கோ..பொங்கும் வீட்டில கும்பல்..

அதுவும் இந்த கோலம் போடறேன்னு போகி அன்னிக்கு அடிக்கிற ராக்கும்மி இருக்கே..ஆண்டவா..

என்னமோ.. switzerland ல இருக்கிற நினைப்பில.. ஒரு பெரிய scarf கட்டிண்டு..

சுத்தி சுத்தி பெரிய டிக்கெட் எல்லாம் கோலம் போட..

வாண்டுகள் நாங்க எல்லாம்... அவாளுக்கு தண்ணி கொடுத்து, கொசு அடிச்சு, முதுகு சொரிஞ்சு விட்டு..

எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சூரியனை வழிபட்டு, காக்கா பிடி கன்னு பிடி வெச்சு..

பொங்கல் release படத்தை.. தியேட்டரே மிரளறமாதிரி கும்பலா பார்த்த இனிமை...

இப்பொ நினச்சாலும்.. பொங்கலை விட தித்திப்பாய் இருக்கு..

Leave விட்டதும்.... தூக்கம் , TV இதே உலகம் நு காலத்தை ஓட்டற இந்த கால குழந்தைகளுக்கு..

காவேரில குளிச்சு, கவளமதை பாட்டி கையால் உருட்டி போட, கதைகள் பேசி சாப்பிட்ட காலத்தை சொன்னா..

கேட்க கூட மனசில்லாத nuclear family குழந்தைகளை நினைக்கும்போது..

இத்தனை விஷயம் இவர்கள் எல்லாரும் miss பண்றாளேனு ஒரு சின்ன வருத்தம் தான்..

குறைஞ்ச சம்பளம், கூட்டு குடும்பம்னு குட்டிகரணம் போட்டு கஷ்டப்பட்டாலும்

இத்தனை இன்பம் என் வாழ்வில் அள்ளித்தந்து..என் சின்ன வயசை சிங்காரிச்ச.. எங்க பாட்டி தாத்தாவை நான் ரொம்ப ரொம்ப miss பண்றேன்..

காலம் யாருக்காகவும் நிற்பதில்லை..

அந்த கால சக்கரத்தில் எத்தனை மனிதர்களை சந்திக்கிறோம்..

பேசறேன் அடுத்தpost ல என்னை பாதித்த மனிதர்களை பற்றி..

அன்புடன்
அகிலா

2 comments:

dhileep said...

அகிலா,
நல்ல நகைச் சுவையான நடை. இயல்பான வார்த்தைப் ப்ரயோகங்கள்.
Easy reading! Continue your good work!
- திப்பிலி

Thangamani said...

அன்புள்ள அகிலா!
சிரிக்கச் சிரிக்கச் செய்து மகிழ வைத்தாய்!
அருமை!உன் நினைவின் பகிர்தல் இனிமை!
என்னையும் அக்காலத்துக்கே கொண்டு போய் விட்டது!
வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.