Monday 17 November, 2008

கடிதமோ ? உள்ளமோ ? - 2

"லெட்டர் மாமா" ன்னு அழைக்கும் "மல்லி" குறும்படம் "மக்கள்' தொலைக்காட்சியில் கண்டேன்!

அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

அன்றிலிருந்து இன்றுவரை...

கடிதத்திற்கு வாழ்வில் முக்கிய இடம் உண்டு!

ஓலை, லிகிதம், மடல் என்று பல பெயர்கள் கடிதத்திற்கு உண்டு!

அரசன் தன் பெண்ணை மணம் செய்ய வேண்டிக் கேட்ட சிற்றரசனுக்கு தூதுவனிடம் "செல் அறித்த ஓலை செல்லுமோ?" என்று மேலும் கூறி மறுத்ததை கேட்டிருக்கிறோம்!

"சுகுமாரா! என் தாபம் தனைநீ அறியாயோ? மாரா!" என்று சகுந்தலை கடிதம் (பாடல்) தாமரை இலையில் எழுதுவதை படத்தில் கண்டு அறிவோம்!

கிளிக்கண்ணியில் "மாலை வடிவேலவர்க்கு ஓலை கிறுக்காச்சுதே! உள்ளமும் கிறுக்காச்சுதே!" என்னும் பாடல் கவிதை இலக்கியமாய் வளர்ந்தது!

"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!" என்ற பாடலும்,

" அதிகாலை, சுபவேளை, ஒரு ஓலை வந்தது!
ஒரு தத்தை, கடிதத்தை, தன் நெஞ்சுக்குள்ளே வாசிக்க"

அன்புள்ள மான் விழியே! ஆசையில் ஓர் கடிதம்"

இப்படி நிறைய பாடல்கள் கடிதத்தைப் பற்றி சினிமாப் பாடலில் காண்கின்றன!

(தொடரும் ..)

No comments: