குழந்தைகள் தின வாழ்த்துகள்!
நேருஜியின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது 1957, நவம்பர்-14 என நினைக்கிறேன்!
நான் அப்போது பதினோறாம் வகுப்புப் படிக்கிறேன்!
நேருஜியைப் பற்றி ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு பரிசும் வாங்கினேன்.
ஒரு ரைட்டர் பேனா!
நேற்று இரவு "மல்லி" படம் பார்த்தேன்!
மனசெல்லாம் மத்தாப்பூ! மல்லியின் தோழியாய் மாறி அவள்பின்னே சென்றேன்!
இயற்கையோடு பேசிப் பாடி வாழும் அவள் ஒரு குட்டி தேவதையோ?
தேவக் கன்னிகையோ? ஞானியோ?
"லெட்டர் மாமா"வுடனும், "குக்கூ"வுடனும் அவளுக்கு உள்ள நட்பின்,
பாசத்தின் பிணைப்பை எப்படி விளக்குவது?
அடிபட்டமானைக் காப்பாற்றும் முனைப்பிலும், ஊருக்குச் செல்லும் தோழி குக்கூவின் ஜீப்பைத் துரத்தி மூச்சுவாங்க, அந்த நீலக்கல் கோர்த்த மாலையை அவளுக்கு சூட்டி மகிழ்வதிலும், மல்லியின் திட உறுதி செயல்பாடு தெரிகின்றது!
அருமையான குழந்தைகள் படம்!
இயக்கிய சந்தோஷ் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி!
வனத்தின் பசுமைகளையும், மல்லி,லெட்டர் மாமா இவர்களின் உணர்வுகளையும் புகைப்படத்தில் கொள்ளயடித்தத் திறத்தைப் புகழ வார்த்தையே இல்லை!
மல்லியாக நடித்த.. அல்ல அல்ல.. வாழ்ந்த அந்தக் குழந்தைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்!
Friday 14 November, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment