Wednesday 12 November, 2008

என்ன சொல்லி நான் எழுத !

இப்படி மங்களம் பாடி முடிஞ்ச என் வீணை class கு மீண்டும் திறப்பு விழா தந்த பெருமை

என் friend ராஜி யோட அத்தை சரஸ்வதி மாமிக்கே போய் சேரும்..

கலை மனமும் கை மணமும் (கை மணம் ஏன்னு நீங்க கேட்கலாம்.. மாமி கல்கத்தா return..

அவா கை பட்ட dham aaloo நாள் முழுக்க சாப்பிடுண்டே இருக்கலாம்..
(north indian dish ஒரு பேரு அப்பொ கத்துண்டேன்)..

பெரிய வீணை ரெண்டும் சின்ன ஒரு வீணை ஒண்ணும் கல்யாணி மாமி கிட்டேர்ந்து விலைக்கு வாங்கி அவர் விட்ட பணியை தொடர ஆரம்பிச்சா..

எங்க சுருள் மாடி வீட்டு second floor லயே வீடு என்பதால்.. timings கிடையாது..

எப்போ மனசுக்கு தோனறதோ.. வந்து வாசிங்கோ சொல்ர.. ஒரு தங்கமான குரு..

அப்படியே.. எங்க class continue ஆகி இருந்தால் எவ்வளவு நன்னா இருந்திருக்கும்..

சரஸ்வதி மாமிக்கு சொந்த வீட்டில் போய் சுகமா வாழணும்னு ஏக்கம்..

நாங்க இருந்த வீட்டிலேர்ந்து 5 km distance ல வீடு கட்டிண்டு, வீணையும் மூட்டை கட்டிண்டு..

எங்களை மட்டும் விட்டுட்டு மாடம்பாக்கம் போய் settle ஆகிட்டா..

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

அதவிட கொடுமை என்னடானா..

வீணை வாங்க வசதி இருந்தும்..வீட்டில் வைக்க இடம் இல்லாத ஒண்டு குடித்தனம்..

இப்படியாக.. வீணை கனவு.. வீணாய் போனது..

கையில் மிஞ்சியது.. வீணை தந்தி தந்த தழும்புகள் தான்..

மனசை விட்டு ஆறாத வடுக்கள் தான்..

சங்கீதத்துக்கு ஒரு பெரிய good bye.. சொல்லி முடிச்சாச்சு..

கொஞ்ச நாள் feelings ஆ இருந்தது..

அப்பறம்.. சங்கீததுக்கும் நமக்கும் ஸ்னானப்ராப்தி கூட இல்லாமல் போச்சு

இப்படியே.. காலம் ஓடிப் போச்சு..

எனக்கு.. வரன் பார்க்கும் படலம் ஆரம்பித்தது..

நல்ல பையன்.. ரொம்ப நல்ல குடும்பம்..

கொடுத்து வெச்சு இருக்கணும் இந்த சம்பந்தம்னு அப்பா..

ரொம்ப சந்தோஷப்பட்டு என்கிட்ட அந்த ஜாதக copy காண்பிச்சார்..

அதுல பையன் பத்தின விவரங்கள் பார்த்தேன்..

அப்பா.. எனக்கு இந்த பையன் வேண்டாம்னு அலறினேன்..

ஏன்னு தெரிஞ்சிக்கணுமா..

wait .. பண்ணுங்கோ

என் next post வரைக்கும்..

akila

2 comments:

Thangamani said...

அன்புள்ள அகிலா!
மிக நன்றாக எழுதுகிறாய்!அடுத்து
என்ன சொல்லப் போகிறாய்?
ஆவலாய் காத்திருக்கிறேன்!

அன்புடன்,
தங்கமணி.

Akila said...

hello amma..
ungal ookkam than.. ennai ezutha vaipathu.. ezutharen..